வனிதாவின் மூன்றாவது திருமணமும், அதனை தொடர்ந்து எழுந்த சர்ச்சைகளும் தான் தற்போதைய கோலிவுட்டின் ஹாட் டாப்பிக்காக இருக்கிறது. வனிதா மட்டும் இன்றி அவர் பெயரை பயன்படுத்தி சிலர் யுடியுப் சேனலில் சர்ச்சையாக பேசி வருவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே, தன்னை பற்றி பலர் விமர்சித்து வருகிறார்கள், அவர்களின் விமர்சனங்களால் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கும் நான், வேறு விதமான முடிவு எடுத்தால், அவர்கள் கொலைகாரர்களாவார்கள், என்று வனிதா திடீர் எச்சரிக்கை விடுடுத்தது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், வனிதாவின் முன்னாள் காதலரான நடன இயக்குநர் ராபர்ட் சமீபத்திய பேட்டி ஒன்றில், வனிதா குறித்து சர்ச்சையான கருத்து தெரிவித்திருப்பது புது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வனிதாவுடன் இணைந்து ‘எம்.ஜி.ஆர் சிவாஜி ரஜினி கமல்’ என்ற படத்தை தயாரித்து இயக்கி ஹீரோவாக நடித்த ராபர்ட், அப்படத்தை வனிதா தயாரித்து தன்னை ஹீரோவாக்கியதால் தான், அவரது பெயரை தனது கையில் பச்சை குத்திக் கொண்டேன். ஆனால், பச்சை குத்தி ஒரு மாதம் ஆவதற்குள் அவருக்கும் தனக்கும் பல பிரச்சினைகள் வந்ததால், அந்த பெயரை அழித்து விட்டேன், என்றார்.
மேலும், வனிதா குறித்து யுடியுப் சேனலில் பேசினால் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. அதற்காகவே பலர் பேசுகிறார்கள், என்றவர் தானும் ஒரு யுடியுப் சேனல் தொடங்க இருப்பதாகவும், அதில் நடனம் பற்றிய வீடியோக்களை வெளியிட இருப்பதாகவும் கூறினார்.
அப்போது, பேட்டி எடுப்பவர், “வனிதா பற்றி வீடியோ போடுங்கள் சீக்கிரம் உங்கள் யுடியுப் சேனல் பிரபலமாகிவிடும்” என்று கூற, அதற்கு ராபர்ட், “வேண்டவே வேண்டாம். புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது. அதுபோல தான் நான், நேர்மையான வீடியோ மட்டுமே போடுவேன். அதை மூன்று பேர் பார்த்தாலும் பரவாயில்லை, வனிதா பெயரை பயன்படுத்த மாட்டேன்” என்று பதில் அளித்தார்.
புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது, என்று ராபர்ட் கூறி வனிதாவை மரண கலாய் கலாய்த்திருப்பதாக நெட்டிசன்கள் விவாதம் செய்ய, ராபர்டின் இந்த வீடியோவுக்கு வனிதா எப்படிப்பட்ட பதிலடி கொடுக்க போகிறார், என்பதும் பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...
திரைத்துறை ஜாம்பவான்கள் கலந்து கொள்ளும் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக தயாரித்து, உருவாக்கி, நடத்துவதன் மூலம் இந்திய ஊடக வெளியில் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ள இந்தியாவின் முன்னணி ஊடகத் தயாரிப்பு மற்றும் திறமை மேலாண்மை நிறுவனமான நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் (Noise and Grains), திரைப்பட தயாரிப்பில் களம் இறங்குகிறது...
‘டாணாக்காரன்’ பட புகழ் இயக்குநர் தமிழ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்திற்கு ‘மார்ஷல்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது...