தொலைக்காட்சியில் இருந்து சினிமாவுக்கு எண்ட்ரியான நடிகைகள் சிலர் தற்போது பிஸியான நடிகையாக வலம் வருகிறார்கள். பிரியா பவானி சங்கர், வாணி போஜன் ஆகியோர் தொலைக்காட்சியில் இருந்து சினிமாவுக்குள் நுழைந்து வெற்றி பெற்றதை தொடர்ந்து மேலும் பல டிவி நடிகைகள் சினிமாவுக்குள் நுழைவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அந்த வகையில், சீரியல் நடிகை ஷிவாணி சினிமாவில் நடிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். 2016 ஆம் ஆண்டு ஒளிபரப்பான ‘சரவணன் மீனாட்சி சீசன் 3’ மூலம் சீரியலில் எண்ட்ரியான ஷிவானி, தற்போது ‘இரட்டை ரோஜா’, ‘பகல் நிலவு’ போன்ற சீரியல் மூலம் மக்களிடம் பிரபலமடைந்திருக்கிறார்.
மாடலிங் மற்றும் சீரியலில் கவனம் செலுத்தி வந்த ஷிவாணி, தற்போது சினிமாவில் நடிக்க முயற்சி மேற்கொண்டு வருகிறார். அதற்காக தனது கவர்ச்சிப் புகைப்படங்களை அவ்வபோது சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். அதனால், இளைஞர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றிருக்கும் ஷிவாணியின் ஹாட் புகைப்படங்களும் வைரலாகி வருகிறது.




'இறுதிப் பக்கம்' திரைப்படத்தைத் தயாரித்த இன்சாம்னியாக்ஸ் ட்ரீம் கிரியேஷன்ஸ் எல்...
தமிழக அரசு மற்றும் NFDC ஆதரவுடன் இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் (ICAF) நடத்தும் 23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது...
திரைப்பட தயாரிப்பாளரும், விஜயின் முன்னாள் மேலாளர் மற்றும் ‘கலப்பை மக்கள் இயக்கம்’ நிறுவனர் பி...