தொலைக்காட்சியில் இருந்து சினிமாவுக்கு எண்ட்ரியான நடிகைகள் சிலர் தற்போது பிஸியான நடிகையாக வலம் வருகிறார்கள். பிரியா பவானி சங்கர், வாணி போஜன் ஆகியோர் தொலைக்காட்சியில் இருந்து சினிமாவுக்குள் நுழைந்து வெற்றி பெற்றதை தொடர்ந்து மேலும் பல டிவி நடிகைகள் சினிமாவுக்குள் நுழைவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அந்த வகையில், சீரியல் நடிகை ஷிவாணி சினிமாவில் நடிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். 2016 ஆம் ஆண்டு ஒளிபரப்பான ‘சரவணன் மீனாட்சி சீசன் 3’ மூலம் சீரியலில் எண்ட்ரியான ஷிவானி, தற்போது ‘இரட்டை ரோஜா’, ‘பகல் நிலவு’ போன்ற சீரியல் மூலம் மக்களிடம் பிரபலமடைந்திருக்கிறார்.
மாடலிங் மற்றும் சீரியலில் கவனம் செலுத்தி வந்த ஷிவாணி, தற்போது சினிமாவில் நடிக்க முயற்சி மேற்கொண்டு வருகிறார். அதற்காக தனது கவர்ச்சிப் புகைப்படங்களை அவ்வபோது சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். அதனால், இளைஞர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றிருக்கும் ஷிவாணியின் ஹாட் புகைப்படங்களும் வைரலாகி வருகிறது.




திரைப்பட தயாரிப்பாளரும், விஜயின் முன்னாள் மேலாளர் மற்றும் ‘கலப்பை மக்கள் இயக்கம்’ நிறுவனர் பி...
சமீபத்திய மழையில் நனைந்த நடை பாதை வியபாரிகளுக்கும், ஏழை எளியவர்களுக்கும், பல உதவிகள் செய்த, கலப்பை மக்கள் இயக்க தலைவர் டாக்டர் பி...
நடிகர் எம்.எஸ்.பாஸ்கரின் மகனும், ‘96’ மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவருமான ஆதித்யா பாஸ்கரும், கெளரி கிஷனும் மீண்டும் இணைந்து நடித்திருக்கும் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததாக படக்குழு அறிவித்துள்ளது...