Latest News :

மக்கள் மனதில் வாழும் எஸ்.பி.பி-க்கு மரணமே இல்லை - நடிகர் துரை சுதாகர் இரங்கல்
Saturday September-26 2020

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைவுக்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், ‘களவாணி 2’ மற்றும் ‘டேனி’ திரைப்படங்கள் மூலம் தனது எதார்த்தமான நடிப்பால் பாராட்டு பெற்ற நடிகர் பப்ளிக் ஸ்டார் நடிகர் துரை சுதாகர், மக்கள் மனதில் வாழும் எஸ்.பி.பி-க்கு மரணமே இல்லை, என்று கூறியிருக்கிறார்.

 

அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “தனது குரல் மூலம் மக்களை மகிழ்வித்த எஸ்.பி.பாலசுப்ரமணியம், காதல், துக்கம், சந்தோஷம், கம்பீரம், அழகு என அனைத்தையும் தனது குரல் மூலம் வெளிப்படுத்தியவர். இசை மீது ஆர்வம் இல்லாதவர்கள் கூட இவரது பாடல்களை கேட்ட பிறகு இசை பிரியர்களாகி இவருடைய பரம விரிசியாகியிருக்கிறார்கள்.

 

இந்திய மொழிகள் அனைத்திலும் பாடல்கள் பாடிய பாடகர் என்ற தனிச்சிறப்போடு வலம் வந்த எஸ்.பி.பி-யின் கோடிக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன். என் வாழ்க்கையில் அவரது பாடல் கேட்காத நாள் இல்லை, என்று சொல்லும் அளவுக்கு அவர் பாடலுடன் வாழ்ந்துக் கொண்டிருக்கிறேன். அவர் உயிர் பிரிந்த செய்தியை அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன்.

 

காலத்தின் கட்டாயத்தால் அவர் நம்மை விட்டு பிரிந்தாலும், நம் இதயத்திற்குள் பாடல்களாக ஒலித்துக் கொண்டிருக்கும் எஸ்.பி.பி-க்கு மரணமே இல்லை.

 

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், இசை ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். அவருடைய ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

Related News

6964

புதிய கோணத்தில் ஹீரோயிசம்! - ’டியூட்’ இயக்குநர் கீர்த்தீஸ்வரன் சொன்ன சீக்ரெட்
Friday October-17 2025

தொடர் வெற்றி பட நாயகனான பிரதீப் ரங்கநாதன் நடிப்பில், அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘டியூட்’ திரைப்படம், இந்த தீபாவளி பண்டிகைக்கு அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக உள்ளது...

நல்ல படம் கொடுக்க வேண்டும் என்பதே என் நோக்கம் - நடிகர் ஹரிஷ் கல்யாண்
Wednesday October-15 2025

தேர்ட் ஐ எண்டர்டெயின்மெண்ட் & எஸ்பி சினிமாஸ் தயாரித்து வழங்க, சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் நடிகர்கள் ஹரிஷ் கல்யாண், அதுல்யா ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'டீசல்'...

Recent Gallery