Latest News :

’துர்கி’-யாக கன்னட சினிமாவில் கால் பதிக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்!
Wednesday April-24 2024

கதாநாயகிகளை மையப்படுத்திய கதைக்களங்களில் தொடர்ந்து வெற்றிக் கொடுத்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி இடம் பிடித்ததோடு, தெலுங்கு உள்ளிட்ட பிற மொழி திரைப்படங்களிலும் தனது நடிப்பு மூலம் கவனம் ஈர்த்து வருகிறார்.

 

இந்த நிலையில், ‘உத்தராகாண்டா’ என்ற படத்தின் மூலம் ஐஸ்வர்யா ராஜேஷ் கன்னட சினிமாவில் கால் பதிக்கிறார். இந்த படத்தில், கன்னட சினிமாவின் முன்னணி நடிகர் டாக்டர்.சிவராஜ் குமார் மற்றும் டாலி தனஞ்செயா ஆகியோர் நடிக்கிறார்கள். இதில், டாலி தனஞ்செயாவுக்கு ஜோடியாக துர்கி என்ற கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார்.  இவர்களுடன் மலையாள நடிகர் விஜய் பாபு, ரங்காயண ரகு, சைத்ரா ஜே. ஆச்சார், உமா ஸ்ரீ, யோகராஜ் பட் , கோபாலகிருஷ்ண தேஷ் பாண்டே உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

 

கே.ஆர்.ஜி ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் கார்த்திக் கவுடா மற்றும் யோகி ஜி.ராஜ் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை ரோஹித் பதகி இயக்குகிறார். அத்வைதா குருமூர்த்தி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு பிரபல பாலிவுட் இசையமைப்பாளரும், பாடகருமான அமித் திரிவேதி இசையமைக்கிறார். கலை இயக்குநராக விஸ்வாஸ் காஷ்யப் பணியாற்றுகிறார்.

 

Udhrakanda

 

ஐஸ்வர்யா ராஜேஷின் அறிமுகத்தால் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு பிஜய்ப்பூர் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நடைபெற்று வருகிறது.

Related News

9703

சின்ன பட்ஜெட்டில் உருவாகும் நல்ல படைப்புகளுக்கு வரப்பிரசாதமாக உருவாகியுள்ள ‘ஓடிடி பிளஸ்’!
Saturday May-04 2024

தமிழ் சினிமாவில் வருடத்திற்கு 200 படங்களாவது வெளியாகி வரும் நிலையில், பல சின்ன பட்ஜெட் படங்களுக்கு திரையரங்குகள் கிடைப்பதில்லை...

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகும் ‘மஞ்சும்மெல் பாய்ஸ்’!
Saturday May-04 2024

தமிழ்நாட்டின் கொடைக்கானல் சுற்றுலா பகுதியில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான ‘மஞ்சும்மெல் பாய்ஸ்’ திரைப்படம் மொழிகள் தாண்டி அனைத்து மாநிலங்களிலும் உள்ள பார்வையாளர்களை கவர்ந்தது...

கபிலன் வைரமுத்து எழுதிய ’ஆகோள்’ நாவல் ஆங்கிலத்தில் வெளியானது!
Saturday May-04 2024

1920 ஆம் ஆண்டு மதுரைக்கு அருகில் உள்ள பெருங்காமநல்லூரில் ஆங்கிலேயரின் குற்ற இனச் சட்டத்திற்கு எதிராகப் போராடி பதினாறு பேர் உயிர் தியாகம் செய்தனர்...