பல பிரச்சினைகளை எதிர்க்கொண்ட விஜயின் ‘மெர்சல்’ அத்தனை தடைகளை தகர்த்தெரிந்து அறிவித்தது போல தீபாவளியன்று (நாளை) வெளியாகிறது.
வனவிலங்கு வாரியத்தின் எதிர்ப்பால், எங்கே படம் தீபாவளிக்கு ரிலிஸாகாமல் போய்விடுமோ! என்று விஜய் ரசிகர்கள் அச்சப்பட்ட நிலையில், நேரடியாக களத்தில் இறங்கிய விஜய், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமையை சந்தித்த மறுநாளே, வனவிலங்கு வாரியத்தின் அவசர கூட்டம் நேற்று காலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ‘மெர்சல்’ படத்திற்கு தடையில்லா சான்றிதழ் வழங்கவும் முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, இந்த சான்றிதழை சென்சார் குழுவுக்கு படக்குழு வழங்கியதை தொடர்ந்து, இன்று சுமார் 11 மணியளவில் ‘மெர்சல்’ படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்கப்பட்டு விடும். இதனால், படமும் சொன்னது போல் நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது.
சென்னையில் உள்ள சில திரையரங்குகளில் நேற்று இரவு டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ள நிலையில், சோர்ந்து போன விஜய் ரசிகர்கள் தற்போது மீண்டும் சுறுசுறுப்படைந்துள்ளார்கள்.
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...
நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள THE MUSIC ACADEMY-யில் 3-வது ஆண்டாக PROVOKE ART FESTIVAL 2025 கோலாகலமாக நடைபெற்றது...