பல பிரச்சினைகளை எதிர்க்கொண்ட விஜயின் ‘மெர்சல்’ அத்தனை தடைகளை தகர்த்தெரிந்து அறிவித்தது போல தீபாவளியன்று (நாளை) வெளியாகிறது.
வனவிலங்கு வாரியத்தின் எதிர்ப்பால், எங்கே படம் தீபாவளிக்கு ரிலிஸாகாமல் போய்விடுமோ! என்று விஜய் ரசிகர்கள் அச்சப்பட்ட நிலையில், நேரடியாக களத்தில் இறங்கிய விஜய், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமையை சந்தித்த மறுநாளே, வனவிலங்கு வாரியத்தின் அவசர கூட்டம் நேற்று காலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ‘மெர்சல்’ படத்திற்கு தடையில்லா சான்றிதழ் வழங்கவும் முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, இந்த சான்றிதழை சென்சார் குழுவுக்கு படக்குழு வழங்கியதை தொடர்ந்து, இன்று சுமார் 11 மணியளவில் ‘மெர்சல்’ படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்கப்பட்டு விடும். இதனால், படமும் சொன்னது போல் நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது.
சென்னையில் உள்ள சில திரையரங்குகளில் நேற்று இரவு டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ள நிலையில், சோர்ந்து போன விஜய் ரசிகர்கள் தற்போது மீண்டும் சுறுசுறுப்படைந்துள்ளார்கள்.
லேர்ன் & டீச் புரொடக்ஷன்ஸ் ( Learn & Teach Production) சார்பில் எஸ்...
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் பட்டியலில் இருந்து, தவிர்க்க முடியாத ஹீரோவாக உருவெடுத்திருக்கும் அர்ஜூன் தாஸ், தனது கதை தேர்வு மூலம் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார்...
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...