இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில், நானி நடித்த ‘தசரா’ திரைப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்த நிலையில், தற்போது நானியும், ஸ்ரீகாந்த் ஒடேலாவும் மீண்டும் கைகோர்த்துள்ளனர். இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்திற்கு ‘நானி ஒடேலா 2’ என்ற தற்காலிக தலைப்பு வைக்கப்பட்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
எஸ்.எல்.வி சினிமாஸ் சார்பில் சுதாகர் செருகுரி தயாரிக்கும் இந்த படம் மிக பிரமாண்டமான முறையில் மட்டும் இன்றி ‘தசரா’ படத்தை விட நூறு மடங்கு அதிகமான தாக்கத்தை பார்வையாளர்களிடம் ஏற்படுத்தும் வகையில் உருவாகும், என்று இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா கூறுகையில், “கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஏழாம் தேதி 'தசரா' படத்தின் இறுதி காட்சி படமாக்கப்படும் போது காட்சி நிறைந்த உடன் 'கட்' என சொன்னேன். தற்போது மீண்டும் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 18 ஆம் தேதி அன்று மீண்டும் 'ஆக்சன்' என சொன்னேன். இதன் போது 'நானிஓடேலா 2' படத்தைப் பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்கான பிரத்யேக காணொளியை படமாக்கினோம். இதற்கு இடையில் 48, 470, 400 வினாடிகள் கடந்து விட்டது. ஒவ்வொரு வினாடியும் என்னுடைய அடுத்த படத்திற்கான அர்த்தமுள்ள உழைப்புக்காக செலவிடப்பட்டிருக்கிறது. எஸ் எல் பி சினிமாஸ் சார்பில் தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி தயாரிப்பில் நானி நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படம், தசரா படத்தை விட நூறு மடங்கு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் ' #நானிஓடேலா 2' திரைப்படம் உருவாகும் என நான் உறுதியளிக்கிறேன்.” என்றார்.
இது குறித்து நடிகர் நானி கூறுகையில், “இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலாவின் பைத்தியக்காரத்தனமான அன்பு என் வாழ்க்கையில் மீண்டும் வந்து விட்டது. இதனை கண்டு தரிசிக்க தயாராக இருங்கள்.” என்றார்.
பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...
வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...