ஜெயம் ரவி நடிப்பில், இயக்குநர் ராஜேஷ்.எம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பிரதர்’ திரைப்படம் தீபாவளி வெளியீடாக வெளியாக உள்ள நிலையில், அவரது புதிய படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜெயம் ரவியின் 34 வது திரைப்படமாக உருவாகும் இப்படத்தை ‘டாடா’ பட புகழ் இயக்குநர் கணேஷ் கே.பாபு இயக்குகிறார்.
ஜெயம் ரவியின் ‘அகிலன்’ மற்றும் விரைவில் வெளியாக உள்ள ‘பிரதர்’ ஆகிய படங்களை தயாரித்துள்ள ஸ்கிரீன் சீன் மீடியா நிறுவனம் இப்படத்தின் மூலம் மூன்றாவது முறையாக ஜெயம் ரவியுடன் கைகோர்த்துள்ளது. ஸ்கிரீன் சீன் மீடியா நிறுவனத்தின் சார்பில் சுந்தர் ஆறுமுகம் தயாரிப்பில் உருவாகும் இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்திற்கு தற்காலிகமாக ‘ஜெ ஆர் 34’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
'பிரதர்' திரைப்படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள பாடல்கள் பெரும் வரவேற்பு பெற்றுள்ள நிலையில் 'ஜெ ஆர் 34' திரைப்படத்திற்காக ஸ்கிரீன் சீன் மீடியா மற்றும் ஜெயம் ரவியுடன் ஹாரிஸ் ஜெயராஜ் மீண்டும் கைகோர்க்கிறார்.
இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் உள்ளிட்ட தகவல்களை படக்குழு விரைவில் அறிவிக்க உள்ள நிலையில், படப்பிடிப்பை டிசம்பர் மாதம் தொடங்க திட்டமிட்டிருப்பதாக தயாரிப்பு தரப்பு தெரிவித்துள்ளது.
வி.ஒய்.ஓ.எம் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சதீஷ் மற்றும் விஜயா சதீஷ் தயாரிப்பில், டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மனிதன் தெய்வமாகலாம்’...
தென்னிந்தியாவில் சுயாதீன பாடல்களுக்கான வரவேற்பு அதிகரித்து வரும் நிலையில், இளைஞர்களை கவரும் துள்ளல் மற்றும் காதல் பாடலாக உருவாகியுள்ளது ‘ஹார்ட்குல்ல’ (Heartkulla)...
பார்வதா என்டர்மெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் கருப்பையா சி...