ஜெயம் ரவி நடிப்பில், இயக்குநர் ராஜேஷ்.எம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பிரதர்’ திரைப்படம் தீபாவளி வெளியீடாக வெளியாக உள்ள நிலையில், அவரது புதிய படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜெயம் ரவியின் 34 வது திரைப்படமாக உருவாகும் இப்படத்தை ‘டாடா’ பட புகழ் இயக்குநர் கணேஷ் கே.பாபு இயக்குகிறார்.
ஜெயம் ரவியின் ‘அகிலன்’ மற்றும் விரைவில் வெளியாக உள்ள ‘பிரதர்’ ஆகிய படங்களை தயாரித்துள்ள ஸ்கிரீன் சீன் மீடியா நிறுவனம் இப்படத்தின் மூலம் மூன்றாவது முறையாக ஜெயம் ரவியுடன் கைகோர்த்துள்ளது. ஸ்கிரீன் சீன் மீடியா நிறுவனத்தின் சார்பில் சுந்தர் ஆறுமுகம் தயாரிப்பில் உருவாகும் இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்திற்கு தற்காலிகமாக ‘ஜெ ஆர் 34’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
'பிரதர்' திரைப்படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள பாடல்கள் பெரும் வரவேற்பு பெற்றுள்ள நிலையில் 'ஜெ ஆர் 34' திரைப்படத்திற்காக ஸ்கிரீன் சீன் மீடியா மற்றும் ஜெயம் ரவியுடன் ஹாரிஸ் ஜெயராஜ் மீண்டும் கைகோர்க்கிறார்.
இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் உள்ளிட்ட தகவல்களை படக்குழு விரைவில் அறிவிக்க உள்ள நிலையில், படப்பிடிப்பை டிசம்பர் மாதம் தொடங்க திட்டமிட்டிருப்பதாக தயாரிப்பு தரப்பு தெரிவித்துள்ளது.
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...