மறைந்த நடிகர் முரளியின் இளைய மகனும், அதர்வா முரளியின் சகோதரருமான ஆகாஷ் முரளி கதாநாயகனாக அறிமுகமாகவுள்ள திரைப்படம் ‘நேசிப்பாயா’. இந்தப் படத்தின் புரோமோஷனுக்காக சமீபத்தில் சென்னையில் உள்ள விமன் கிறிஸ்டியன் காலேஜிற்கு படக்குழு சென்றபோது அங்குள்ள மாணவிகள் படக்குழுவினருக்கும் படத்தின் டீசருக்கும் அமோக வரவேற்புக் கொடுத்தனர்.
இந்த உற்சாக வரவேற்பு படக்குழுவினருக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்வில் நடிகர் ஆகாஷ் முரளியுடன் இயக்குநர் விஷ்ணுவர்தன் மற்றும் படத்தின் இணை தயாரிப்பாளரும் ஆகாஷ் முரளியின் மனைவியுமான சினேகா பிரிட்டோவும் கலந்து கொண்டனர்.
எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸின் டாக்டர் எஸ். சேவியர் பிரிட்டோ தயாரிப்பில், இயக்குநர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் உருவான படம் ‘நேசிப்பாயா’. ஆகாஷ் முரளி மற்றும் அதிதி சங்கர் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தில் ஆர். சரத்குமார், பிரபு, குஷ்பு சுந்தர், ராஜா, கல்கி கோச்லின், ஷிவ் பண்டிட் மற்றும் பலர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பிலும், கேமரூன் எரிக் பிரிசன் ஒளிப்பதிவிலும் இந்த படம் காட்சி மற்றும் இசை விருந்தை பார்வையாளர்களுக்குத் தரும் என படக்குழு உறுதியளித்துள்ளது.
படத்தின் ஆடியோ, டிரெய்லர் மற்றும் உலகளாவிய திரையரங்கு வெளியீட்டு தேதி குறித்த விவரங்களை படக்குழு விரைவில் வெளியிடுவார்கள்!
இயக்குநர் நிதிஷ் சகாதேவ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'தலைவர் தம்பி தலைமையில்' படத்தில் ஜீவா, தம்பி ராமையா, இளவரசு, பிரார்த்தனா நாதன், ஜெய்வந்த், ஜென்சன் திவாகர், மணிமேகலை, சர்ஜின் குமார், ராஜேஷ் பாண்டியன், சுபாஷ் கண்ணன், அமித் மோகன், அனு ராஜ், சரத் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்...
தமிழ் திரையுலகில் முன்னணி வசூல் நாயகனாக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன், பல்வேறு ஜானர்களில் தனது அபாரமான நடிப்புத் திறனை நிரூபித்துள்ளார்...
விஜய் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் வெளியாகாது, என்று தயாரிப்பு தரப்பு நேற்று இரவு அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது...