தொடர் சாதனைகளை செய்து வரும் ‘மெர்சல்’ படத்திற்கு மிகப்பெரிய சோதனை வந்தது அனைவருக்கும் அறிந்ததே. இதையடுத்து நேற்று நடைபெற்ற வனவிலங்கு வாரியத்தின் அவசர கூட்டத்தில், ‘மெர்சல்’ படத்திற்கு தடையில்லா சான்றிதழ் வழங்கப்பட்டது.
அந்த சான்றிதழை சென்சார் குழுவிடம் ஒப்படைத்த பிறகே படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்கப்படும், சென்சார் சான்றிதழ் கிடைத்தால் தான் படம் ரிலீஸாகும் என்பதால், ’மெர்சல்’ படக்குழு படபடப்பிலே இருந்தனர்.
தடையில்லா சான்றிதழை சென்சார் குழுவிடம் ஒப்படைத்தாலும், இன்று மத்தியம் வரை படக்குழுவினர் கைக்கு சென்சார் சான்றிதழ் கிடைக்கவில்லை. இருந்தாலும், பல திரையரங்குகளில் டிக்கெட் முன் பதிவு தொடங்கியது.
இந்த நிலையில், இன்று மாலை சுமார் 5 மணியளவில் ‘மெர்ச’ படத்தின் சென்சார் சான்றிதழ் தயாரிப்பு தரப்புக்கு கிடைத்தது. இதனையடுத்து தயாரிப்பு தரப்பினர் நிம்மதியடைந்தனர்.
மேலும், படத்தின் 5 இடங்களில் கட் கொடுத்த சென்சார் குழு, படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. கட்டுகள் பல வாங்கியும், ‘மெர்சல்’ படத்தின் நீளம் 170.08 ஆக உள்ளது. அதாவது, 2 மணி நேரம் 50 நிமிடமாகும், கிட்டதட்ட 3 மணி நேர படமாக மெர்சல் உள்ளது.
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...
நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள THE MUSIC ACADEMY-யில் 3-வது ஆண்டாக PROVOKE ART FESTIVAL 2025 கோலாகலமாக நடைபெற்றது...