Latest News :

குற்ற சம்பவங்களின் பின்னணியில் உருவாகும் ‘யாத்ரீகன்’!
Thursday October-10 2024

உண்மை குற்ற சம்பவங்களின் பின்னணியில் உருவாகும் கிரைம் திரில்லர் படம் ‘யாத்ரீகன்’. அறிமுக இயக்குநர் பிரேம் நசீர் இயக்கும் இப்படத்தை ஆர்.எம்.பி புரொடக்‌ஷன்ஸ் சார்பில் தனலட்சுமி கோபாலன் தயாரிக்கிறார். பிக் பாஸ் புகழ் தர்ஷன் நாயகனாகவும், மாளவிகா நாயகியாகவும் நடிக்கிறார்கள். இவர்களுடன் காளி வெங்கட், ப்ராங்க் ஸ்டர் ராகுல், பானு உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். 

 

தற்போது இப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், இப்படம் குறித்து தயாரிப்பாளர் வி.ஜி.தனலட்சுமி கோபாலன் கூறுகையில், “நாங்கள் திரைப்படங்களைத் தயாரிக்க முடிவு செய்தபோது, ​​நல்ல தரமான மற்றும் உணர்வுப்பூர்வமான கதைகளைத் தேர்வு செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம். இயக்குநர் பிரேம் நசீர் 'யாத்ரீகன்' கதையை சொன்னபோது நாங்கள் எதிர்பார்த்தபடியே இருந்தது. மேலும் அவர் இயக்குநர்கள் சீனு ராமசாமி, முத்தையா மற்றும் எஸ்.ஆர். பிரபாகரன் போன்ற புகழ்பெற்ற இயக்குநர்களிடம் பணி புரிந்தவர். நல்ல தரமான திரைப்படங்களை இயக்கி, உறுதியளித்தபடி சரியான நேரத்தில் இறுதி வெளியீட்டை கொடுப்பதில் இந்த இயக்குநர்கள் பெயர் பெற்றவர்கள். பிரேமுடன் பணியாற்றுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். மேலும் 'யாத்ரீகன்' எங்கள் அனைவருக்கும் மறக்க முடியாத படமாக இருக்கும்.” என்றார். 

 

இயக்குநர் பிரேம் நசீர் படம் பற்றி கூறுகையில், “தயாரிப்பாளர் வி.ஜி. தனலட்சுமி மற்றும் ஆர்எம்பி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனம் திரைப்படங்களைப் பற்றி நன்கு அறிந்தவர்கள். அவர்களுக்காக ஒரு படத்தை இயக்க என்னைத் தேர்ந்தெடுத்ததில் மகிழ்ச்சி. 'யாத்ரீகன்' திரைப்படம் ஒரு பயன வலைப்பதிவு அடிப்படையிலான திரைப்படம். இரண்டு வெவ்வேறு நபர்கள் மற்றும் அவர்களின் வெவ்வேறு சித்தாந்தங்களைப் பற்றியது. ஒரு மர்மமான நிகழ்வு அவர்களின் பிரச்சினைகளை எவ்வாறு பிணைக்கிறது என்பது படத்தின் மையக்கரு. இந்தக் கதையின் நாயகன் துறுதுறுவென எனர்ஜியுடன் தேவை எனும்போது பிக் பாஸ்  தர்ஷன் அதற்கு சரியான தேர்வாக இருந்தார். ஏனெனில், பிக் பாஸ் நிகழ்ச்சியிலேயே அவரைப் பார்த்திருக்கிறேன். இந்த படத்தில் மாளவிகா கதாநாயகியாக நடிக்கிறார். சமீபகாலங்களில் நடிகர் காளி வெங்கட் தமிழ் சினிமாவில் தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் தனது கதாபாத்திரம் மூலம் அந்தப் படத்தை அடுத்த நிலைக்கு உயர்த்திக் கொண்டிருக்கிறார். என்னைப் போன்ற ஆர்வமுள்ள இயக்குநர்கள் அவருக்கான கதைகளை எழுதத் தொடங்கியதைப் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் விரைவில் நடிகர் நாசர் சார் போன்ற பன்முகம் கொண்ட நடிகராகப் போகிறார். அவர் இந்தப் படத்தில் நடிப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.” என்றார். 

 

சந்தானம் சேகர் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு அபிஷேக் இசையமைக்கிறார். பாபு கலை இயக்குநராக பணியாற்ற, சி.எஸ்.பிரேம் படத்தொகுப்பு செய்கிறார். 

Related News

10103

சினிமாவில் கமிஷனை ஒழிக்க வேண்டும்! - ‘ரெட் லேபில்’ தயாரிப்பாளர் ஆதங்கம்
Tuesday February-03 2026

ரெவ்ஜென் பிலிம் பேக்டரி சார்பில் லெனின் தயாரித்து, நாயகனாக நடித்துள்ள படம் ‘ரெட் லேபில்’...

’சிலம்பாட்டம்’ மீண்டும் வெளியாவது STR ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான் - டி.ராஜேந்தர்
Tuesday February-03 2026

சிலம்பரசன் பிறந்தநாளைத் தொடர்ந்து அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில், லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான பிளாக்பஸ்டர் படமான ’சிலம்பாட்டம்’ திரைப்படம்,  வரும் பிப்ரவரி 6 ஆம் தேதி  திரையரங்குகளில் மீண்டும் வெளியாகிறது...

பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினத்தில் வெளியாகும் ‘ட்ரீம் கேர்ள்’!
Monday February-02 2026

சாருலதா பிலிம்ஸ் தயாரிப்பில் எம்...

Recent Gallery