Latest News :

குற்ற சம்பவங்களின் பின்னணியில் உருவாகும் ‘யாத்ரீகன்’!
Thursday October-10 2024

உண்மை குற்ற சம்பவங்களின் பின்னணியில் உருவாகும் கிரைம் திரில்லர் படம் ‘யாத்ரீகன்’. அறிமுக இயக்குநர் பிரேம் நசீர் இயக்கும் இப்படத்தை ஆர்.எம்.பி புரொடக்‌ஷன்ஸ் சார்பில் தனலட்சுமி கோபாலன் தயாரிக்கிறார். பிக் பாஸ் புகழ் தர்ஷன் நாயகனாகவும், மாளவிகா நாயகியாகவும் நடிக்கிறார்கள். இவர்களுடன் காளி வெங்கட், ப்ராங்க் ஸ்டர் ராகுல், பானு உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். 

 

தற்போது இப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், இப்படம் குறித்து தயாரிப்பாளர் வி.ஜி.தனலட்சுமி கோபாலன் கூறுகையில், “நாங்கள் திரைப்படங்களைத் தயாரிக்க முடிவு செய்தபோது, ​​நல்ல தரமான மற்றும் உணர்வுப்பூர்வமான கதைகளைத் தேர்வு செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம். இயக்குநர் பிரேம் நசீர் 'யாத்ரீகன்' கதையை சொன்னபோது நாங்கள் எதிர்பார்த்தபடியே இருந்தது. மேலும் அவர் இயக்குநர்கள் சீனு ராமசாமி, முத்தையா மற்றும் எஸ்.ஆர். பிரபாகரன் போன்ற புகழ்பெற்ற இயக்குநர்களிடம் பணி புரிந்தவர். நல்ல தரமான திரைப்படங்களை இயக்கி, உறுதியளித்தபடி சரியான நேரத்தில் இறுதி வெளியீட்டை கொடுப்பதில் இந்த இயக்குநர்கள் பெயர் பெற்றவர்கள். பிரேமுடன் பணியாற்றுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். மேலும் 'யாத்ரீகன்' எங்கள் அனைவருக்கும் மறக்க முடியாத படமாக இருக்கும்.” என்றார். 

 

இயக்குநர் பிரேம் நசீர் படம் பற்றி கூறுகையில், “தயாரிப்பாளர் வி.ஜி. தனலட்சுமி மற்றும் ஆர்எம்பி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனம் திரைப்படங்களைப் பற்றி நன்கு அறிந்தவர்கள். அவர்களுக்காக ஒரு படத்தை இயக்க என்னைத் தேர்ந்தெடுத்ததில் மகிழ்ச்சி. 'யாத்ரீகன்' திரைப்படம் ஒரு பயன வலைப்பதிவு அடிப்படையிலான திரைப்படம். இரண்டு வெவ்வேறு நபர்கள் மற்றும் அவர்களின் வெவ்வேறு சித்தாந்தங்களைப் பற்றியது. ஒரு மர்மமான நிகழ்வு அவர்களின் பிரச்சினைகளை எவ்வாறு பிணைக்கிறது என்பது படத்தின் மையக்கரு. இந்தக் கதையின் நாயகன் துறுதுறுவென எனர்ஜியுடன் தேவை எனும்போது பிக் பாஸ்  தர்ஷன் அதற்கு சரியான தேர்வாக இருந்தார். ஏனெனில், பிக் பாஸ் நிகழ்ச்சியிலேயே அவரைப் பார்த்திருக்கிறேன். இந்த படத்தில் மாளவிகா கதாநாயகியாக நடிக்கிறார். சமீபகாலங்களில் நடிகர் காளி வெங்கட் தமிழ் சினிமாவில் தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் தனது கதாபாத்திரம் மூலம் அந்தப் படத்தை அடுத்த நிலைக்கு உயர்த்திக் கொண்டிருக்கிறார். என்னைப் போன்ற ஆர்வமுள்ள இயக்குநர்கள் அவருக்கான கதைகளை எழுதத் தொடங்கியதைப் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் விரைவில் நடிகர் நாசர் சார் போன்ற பன்முகம் கொண்ட நடிகராகப் போகிறார். அவர் இந்தப் படத்தில் நடிப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.” என்றார். 

 

சந்தானம் சேகர் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு அபிஷேக் இசையமைக்கிறார். பாபு கலை இயக்குநராக பணியாற்ற, சி.எஸ்.பிரேம் படத்தொகுப்பு செய்கிறார். 

Related News

10103

முதல்வருக்கு நன்றி தெரிவித்த பாடகி மாலதி லக்‌ஷ்மண்!
Wednesday November-26 2025

இசை மற்றும் கலைகளை வளர்த்து ஊக்குவிக்கும் வகையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு டாக்டர் ஜெ...

ஒரே நேரத்தில் இரண்டு படங்கள் தயாரிக்கும் சோல்ஜர்ஸ் ஃபிலிம் ஃபேக்டரி!
Wednesday November-26 2025

நல்ல கதையம்சம் கொண்ட தரமான கதைகளை தயாரிப்பதற்கு பெயர் பெற்றவர் சோல்ஜர்ஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பாளர் கே...

பூரி ஜெகன்னாத் - விஜய் சேதுபதி கூட்டணி படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!
Wednesday November-26 2025

பிரபல முன்னணி இயக்குநர் பூரி ஜெகன்னாத், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, சம்யுக்தா, சார்மி கௌர், JB நாராயண் ராவ் கொண்ட்ரோலா கூட்டணியில், பெரும் எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ள #PuriSethupathi படத்தின் முழு படப்பிடிப்பும் அதிகாரப்பூர்வமாக நிறைவடைந்துவிட்டது...

Recent Gallery