இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ள விஜயின் ‘மெர்சல்’ படத்தை ரசிகர்கள் பிரம்மாண்டமாக கொண்டாடி வருகிறார்கள்.
தமிழகத்தின் பல பகுதிகளில் சிறப்பு காட்சி அதிகாலையில் திரையிடப்பட்டுள்ளது. இதனால், ரசிகர்கள் விஜய் பேனருக்கு பால் அபிஷேகம் செய்வது, பெரிய அளவில் கட்-அவுட் வைப்பது என்று மெர்சல் படத்தை கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில், காஞ்சிபுரம் அடுத்த வாலாஜாபாத் பேருந்து நிலையம் அருகே, ‘மெர்சல்’ படத்தின் பேனரை கட்ட குடிநீர் குழாய் சுவரின் மீது நான்கு பேர் ஏறிய போது சுவர் இடிந்து விழுந்ததில், கீழே நின்று கொண்டிருந்த 24 வயது வாலிபலி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து வாலாஜாபாத் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல் வாட்ஸ்-அப்பில் வைரலாக பரவி வருகிறது.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...