Latest News :

’மெர்சல்’ படத்தால் ஏற்பட்ட முதல் பலி!
Wednesday October-18 2017

இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ள விஜயின் ‘மெர்சல்’ படத்தை ரசிகர்கள் பிரம்மாண்டமாக கொண்டாடி வருகிறார்கள்.

 

தமிழகத்தின் பல பகுதிகளில் சிறப்பு காட்சி அதிகாலையில் திரையிடப்பட்டுள்ளது. இதனால், ரசிகர்கள் விஜய் பேனருக்கு பால் அபிஷேகம் செய்வது, பெரிய அளவில் கட்-அவுட் வைப்பது என்று மெர்சல் படத்தை கொண்டாடி வருகின்றனர்.

 

இந்த நிலையில், காஞ்சிபுரம் அடுத்த வாலாஜாபாத் பேருந்து நிலையம் அருகே, ‘மெர்சல்’ படத்தின் பேனரை கட்ட குடிநீர் குழாய் சுவரின் மீது நான்கு பேர் ஏறிய போது சுவர் இடிந்து விழுந்ததில், கீழே நின்று கொண்டிருந்த 24 வயது வாலிபலி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

 

இது குறித்து வாலாஜாபாத் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல் வாட்ஸ்-அப்பில் வைரலாக பரவி வருகிறது.

Related News

1013

”விஜய் முதலமைச்சரானால் நல்லதுதான்” - மனம் திறந்த பி.டி.செல்வகுமார்
Tuesday November-04 2025

பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...

கானா பாட்டு, ஆப்பிரிக்க சிறுவர்களின் நடனம்! - உற்சாகமூட்டும் “ஆஃப்ரோ தபாங்” பாடல்
Tuesday November-04 2025

அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...

கலைஞர்களுக்கு விருது வழங்கி கெளரவித்த ’ப்ரோவோக் கலை விழா 22025’!
Monday November-03 2025

நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள THE MUSIC ACADEMY-யில் 3-வது ஆண்டாக PROVOKE ART FESTIVAL 2025 கோலாகலமாக நடைபெற்றது...

Recent Gallery