அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் விஜய், விரைவில் அரசியல் பணிகளுக்கு ஓய்வு கொடுத்து விட்டு தனது படத்தின் பணிகளில் தீவிரம் காட்ட உள்ளார். விஜயின் 69 வது படத்தின் படப்பிடிப்பு கடந்த செப்டம்பர் மாதம் பாடல் காட்சியுடன் தொடங்கியது. ஒரு பாடல் படமாக்கப்பட்ட நிலையில் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. விரைவில் விஜய் 69 படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கும் நிலையில், அப்படம் பற்றிய அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
மிகப்பெரிய பட்ஜெட்களில் உருவாகும் விஜய் படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் படத்தின் இயக்குநர்கள் மட்டும் இன்றி படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கு சம்பளமாக அவர்கள் கேட்கும் தொகையை கொடுத்து விடுவார்கள். ஆனால், விஜய் 69 படத்தில் முன்னணி நடிகர் ஒருவர் தான் தற்போது வாங்கும் சம்பள தொகையை கேட்க, அவருக்கு தயாரிப்பு தரப்பு நோ, சொன்னதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
தலைவா, மெர்சல் போன்ற படங்களில் நடித்திருக்கும் சத்யராஜை விஜய் 69 படத்திலும் நடிக்க அனுகியிருக்கிறார்கள். அவரது கதாபாத்திரம் சிறப்பானதாக இருந்ததால் அவரும் நடிக்க ஒப்புக்கொண்டாராம். ஆனால், அவர் சம்பளம் கேட்ட போது, எங்களிடம் அவ்வளவு பட்ஜெட் இல்லை, என்று சொல்லிவிட்டார்களாம். அதனால், சத்யராஜ் அந்த படத்தில் நடிக்க மறுத்துவிட்டாராம்.
விஜய் தனது கட்சியின் முதல் மாநாட்டை வெற்றிகரமாக முடித்திருக்கும் நிலையில், அவர் நடிக்கும் கடைசிப் படம் என்று சொல்லப்படும் ‘விஜய் 69’-க்கு இப்படி ஒரு நிலையா?, என்று கோலிவுட்டே அதிர்ச்சியடைந்துள்ளது.
மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிப்பில், புச்சி பாபு சானா ,இயக்கத்தில் உருவாகும், மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பிரம்மாண்டமான பான்-இந்தியா கிராமத்து பின்னணியில் ஆக்சன் ஸ்போர்ட்ஸ் டிராமா திரைப்படமான “பெத்தி” படத்தின் இறுதிக்கட்ட பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது...
தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் மகேந்திரன்...
வீர அன்பரசு எழுதி, இயக்கி, நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் ‘கமாண்டோவின் லவ் ஸ்டோரி’...