அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் விஜய், விரைவில் அரசியல் பணிகளுக்கு ஓய்வு கொடுத்து விட்டு தனது படத்தின் பணிகளில் தீவிரம் காட்ட உள்ளார். விஜயின் 69 வது படத்தின் படப்பிடிப்பு கடந்த செப்டம்பர் மாதம் பாடல் காட்சியுடன் தொடங்கியது. ஒரு பாடல் படமாக்கப்பட்ட நிலையில் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. விரைவில் விஜய் 69 படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கும் நிலையில், அப்படம் பற்றிய அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
மிகப்பெரிய பட்ஜெட்களில் உருவாகும் விஜய் படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் படத்தின் இயக்குநர்கள் மட்டும் இன்றி படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கு சம்பளமாக அவர்கள் கேட்கும் தொகையை கொடுத்து விடுவார்கள். ஆனால், விஜய் 69 படத்தில் முன்னணி நடிகர் ஒருவர் தான் தற்போது வாங்கும் சம்பள தொகையை கேட்க, அவருக்கு தயாரிப்பு தரப்பு நோ, சொன்னதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
தலைவா, மெர்சல் போன்ற படங்களில் நடித்திருக்கும் சத்யராஜை விஜய் 69 படத்திலும் நடிக்க அனுகியிருக்கிறார்கள். அவரது கதாபாத்திரம் சிறப்பானதாக இருந்ததால் அவரும் நடிக்க ஒப்புக்கொண்டாராம். ஆனால், அவர் சம்பளம் கேட்ட போது, எங்களிடம் அவ்வளவு பட்ஜெட் இல்லை, என்று சொல்லிவிட்டார்களாம். அதனால், சத்யராஜ் அந்த படத்தில் நடிக்க மறுத்துவிட்டாராம்.
விஜய் தனது கட்சியின் முதல் மாநாட்டை வெற்றிகரமாக முடித்திருக்கும் நிலையில், அவர் நடிக்கும் கடைசிப் படம் என்று சொல்லப்படும் ‘விஜய் 69’-க்கு இப்படி ஒரு நிலையா?, என்று கோலிவுட்டே அதிர்ச்சியடைந்துள்ளது.
2026-ம் ஆண்டின் மிகப் பெரிய எதிர்பார்ப்பு மிக்க படங்களுல் ஒன்றாகக் கருதப்படும், ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிக்கும் ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’ (Toxic: A Fairytale for Grown-ups), திரைப்படத்தில், கியாரா அத்வானி (Kiara Advani) ஏற்றுள்ள ‘நாடியா’ (Nadia) கதாபாத்திரத்தின் முதல் பார்வை போஸ்டரை படக்குழு அதிகாரபூர்வமாக சமீபத்தில் வெளியிட்டது...
உலகம் முழுவதும் உள்ள படைப்பாளிகளுக்கு நேரடியாக தயாரிப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களை அடையும் வாய்ப்பை உருவாக்கி கொடுக்கும் விதத்தில், ’தி ஸ்கிரிப்ட் கிராஃப்ட் இன்டர்நேஷனல்’ (The Script Craft International Short Film Festival) என்ற தலைப்பில் குறும்பட போட்டி ஒன்று தொடங்கியுள்ளது...
இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவியாளராக பணியாற்றிய குரு...