’மெர்சல்’ படத்தை வெளியிட எதிர்ப்பு தெரிவித்து பெங்களூர் மற்றும் மைசூரில் கன்னட அமைப்புகள் நடத்திய போராட்டத்தின் போது, விஜய் ரசிகர்களுக்கும், கன்னட அமைப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மல்லேஸ்வரம் ராதாகிருஷ்ணா தியேட்டரில் ‘மெர்சல்’ திரைப்படம் திரையிடப்பட்டது. விஜய் ரசிகர்கள் பெரிய அளவில் கட்-அவுட் வைத்து படத்தின் ரிலிஸை கொண்டாடினார்கள்.
கர்நாடகாவில் தமிழ் திரைப்படம் வெளியிடக் கூடாது என முழக்கமிட்டபடி வந்த கன்னட அமைப்பினர் விஜய் ரசிகர்கள் வைத்திருந்த கட் அவுட்டுகளை அகற்றினர். இதையடுத்து விஜய் ரசிகர்களுக்கும் கன்னட அமைப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் மெர்சல் படம் திரையிடப்படவில்லை.
இதேபோல் மைசூருவில் தியேட்டர் ஒன்றிலும் கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தினர். அங்கும் மெர்சல் திரையிடப்படவில்லை.
மேலும், விஜய் ரசிகர்கள் கன்னட அமைப்பினரால் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவங்களால் மைசூர் மற்றும் பெங்களூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...