‘டாடா’ மற்றும் ‘ஸ்டார்’ என தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்ததால் சம்பளம் விசயத்தில் கரார் காட்டி வந்த கவின், ‘பளடி பெக்கர்’ படத்தை மிகவும் நம்பியிருந்தார். அப்படம் எப்படியும் பெரிய வெற்றி பெற்று விடும், அதன் பிறகு தனது சம்பளத்தை மேலும் அதிகரித்து விடலாம் என்று கனவு கண்டவர், அப்படம் வெளியாகும் முன்பே, நடன இயக்குநர் சதீஷ் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆன போது பேசிய சம்பளத்தை விட, தற்போது தனது மார்க்கெட் உயர்ந்திருக்கும் அளவுக்கு சம்பளம் கொடுத்தால் தான் நடிப்பேன், என்று பிடிவாதம் பிடித்தார்.
ஆனால், படத்தை தயாரிக்கும் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல், படம் தொடங்கிய போது பேசிய சம்பளத்தை தவிர கூடுதல் தொகை தர முடியாது, விருப்பம் இருந்தால் நடிக்கட்டும், இல்லையென்றால் படம் அப்படியே கிடக்கட்டும், என்று கூறிவிட்டாராம்.
யாருக்கு நஷ்ட்டம் போங்கயா.., என்ற எண்ணத்தில் கவினும் அந்த படத்தை கிடப்பில் போட்டுவிட்டு நயன்தாராவுன் இணைந்து நடிக்கும் படம் மற்றும் வெற்றிமாறன் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் இயக்கத்தில் ஒரு படம் என்று இரண்டு படங்களில் மாறி மாறி நடித்துக் கொண்டிருந்தார்.
இந்த நிலையில், தீபாவளியன்று வெளியான ‘ப்ளடி பெக்கர்’ படுதோல்வி அடைந்ததால் ஆடிப்போன கவின், சதீஷ் இயக்கும் படத்தை ஆரம்பத்தில் ஒப்புக்கொண்ட சம்பளத்திலேயே முடித்துக் கொடுக்க முன் வந்திருப்பதோடு, அதற்கான பணிகளிலும் ஈடுபட்டிருக்கிறாராம்.
தோல்வி கொடுத்த படிப்பினையால் மனம் மாறிய கவினின் நடவடிக்கையால் படத்தின் தயாரிப்பாளர் ராகுல் நிம்மதியடைந்திருக்கிறாராம்.
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...