நிலவேம்பு கசாயத்தை பொது மக்களுக்கு விநியோகம் செய்ய வேண்டாம், என்று நடிகர் கமல்ஹாசன் தனது நற்பணி மன்றத்தினரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழகத்தில் வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலால் பலர் உயிரிழந்து வருகின்றனர். இந்த நோயை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகள் சார்பில், பொது மக்களுக்கு நிலவேம்பு கசாயம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், நிலவேம்பு கசாயம் குடுப்பதால் சிலருக்கு உடல் நலக்குறைவு ஏற்படுவதாக தகவல் வெளியாகியுள்ளதை தொடர்ந்து, ஆராய்ச்சியில் நிலவேம்பு பயன்படுத்துவதன் மூலம் எந்த பாதிப்பும் ஏற்படாது என்பது தெரியும் வரை அதை விநியோகம் செய்ய வேண்டாம், என நடிகர் கமல்ஹாசன் தனது ரசிகர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “சரியான ஆராய்ச்சி முடிவுகள் கிடைக்கும்வரை நம் இயக்கத்தார் நிலவேம்பு விநியோகத்தில் ஈடுபடாதிருக்க கேட்டுக்கொள்கிறேன். மற்ற பணிகள் தொடரட்டும்.” என்று தெரிவித்துள்ளார்.
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...