‘கங்குவா’ திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் கோவை, ஆனைமலை அருள்மிகு மாசாணி அம்மன் கோவிலில் தொடங்கியது. ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ், எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கிறார்கள்.
’அருவி’, ’தீரன் அதிகாரம் ஒன்று’, ’கைதி’, ’சுல்தான்’ மற்றும் ’ஓக்கே ஓக்க ஜீவிதம்’ போன்ற பிளாக்பஸ்டர் படங்களைத் தயாரித்த ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம், இப்படத்தை அதிக பொருச் செலவில் பிரமாண்டமாக தயாரிக்க உள்ளது.
காமெடி கலந்த ஆக்ஷன் பொழுதுபோக்கு படமாக உருவாக உள்ள இப்படத்தில் முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பணியாற்ற உள்ளனர்.
இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கோவையில் நடைபெற உள்ளது. முன்னதாக நேற்று கோவை, ஆனைமலை மாசாணி அம்மன் கோவிலில் நடைபெற்ற பூஜையில் நடிகர் சூர்யா, இயக்குநர் ஆர்ஜே பாலாஜி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டார்கள்.

படத்தின் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் உள்ளிட்ட விபரங்களை விரைவில் அறிவிக்க இருக்கும் படக்குழு, பத்தினை 2025 ஆம் ஆண்டு பிற்பகுதியில் வெளியிட திட்டமிட்டுள்ளது.
வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...
Strengthening its commitment to advanced cancer diagnosis and treatment, Iswarya Hospital today inaugurated the Iswarya Cancer Centre at its OMR Taramani facility in Chennai...