Latest News :

”கண்டிப்பாக உங்களை இந்த நிகழ்வு ஆச்சரியப்படுத்தும்” - உறுதியளித்த பிரபுதேவா
Sunday January-12 2025

இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன், நடனப் புயல் என்று வர்ணிக்கப்படும் நடிகரும், நடன இயக்குநருமான பிரபுதேவாவின் பிரமாண்டமான நேரடி நடன நிகழ்ச்சி இந்தியாவில் முதல் முறையாக நடக்க உள்ளது. 

 

’பிரபுதேவா’ஸ் வைப் (Prabhudeva's Vibe) என்ற தலைப்பில் வரும் பிப்ரவரி 23 ஆம் தேதி சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற இருக்கும் இந்த நிகழ்வை பிரபல நிகழ்ச்சி வடிவமைப்பு நிறுவனமான அருண் ஈவெண்ட்ஸ் வடிவமைத்து நடத்த, திரைப்பட இயக்குநர் வி.எம்.ஆர்.ரமேஷ், ஜி ஸ்டார் உமாபதி மற்றும் ஜெய்சங்கர் ஆகியோர் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.

 

இந்த நேரடி நடன நிகழ்ச்சியின் இயக்குநராக திரைப்பட நடிகரும் இயக்குநருமான ‘தூத்துக்குடி’ பட புகழ் ஹரிக்குமார் பணியாற்றுகிறார். பிரபல திரைப்பட கலை இயக்குநர் கிரண், பல்வேறு விதமான அரங்குகளை இந்நிகழ்ச்சிக்காக உருவாக்க உள்ளார்.

 

இந்தியாவின் பிரமாண்ட நேரடி நடன நிகழ்வான ’பிரபுதேவா’ஸ் வைப் (Prabhudeva's Vibe) நிகழ்ச்சிக்கான டிக்கெட் அறிமுக விழா மற்றும் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக திரைப்பட தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ்.தாணு, ஐசரி கே.கணேஷ், நடிகை கோமல் சர்மா மற்றும் பிரபுதேவா ஆகியோர் கலந்துக் கொண்டார்கள்.

 

தனது முதல் நேரடி நடன நிகழ்ச்சி குறித்து பிரபுதேவா பேசுகையில், “இது மிக இனிமையான தருணம். அருண் ஈவண்ட்ஸ்க்கு என் முதல் நன்றி. நான் இப்படி ஒரு நிகழ்ச்சியை நினைத்துக் கூட பார்த்ததில்லை, அருண் ஈவண்ட்ஸ் முயற்சி தான். ஹரி இதற்கு ஒரு ஃபேக் போனாக இருந்தார். இனி எல்லாம் உங்கள் ஆசிர்வாதம் தான். நீங்கள் சினிமா போல எதிர்பார்ப்பீர்கள். சினிமாவில் கட் பண்னி, கட் பண்ணி ஆடுவோம். இதில் அப்படி முடியாது தொடர்ந்து ஆட வேண்டும். அதற்காக தொடர்ந்து ரிகர்சல் செய்து வருகிறேன். உங்களை மகிழ்விக்க வேண்டும். அதற்காக 200 சதவீத உழைப்பை போட்டு வருகிறேன்.  கண்டிப்பாக உங்களை இந்த நிகழ்வு ஆச்சரியப்படுத்தும். எல்லோருக்கும் நன்றி.” என்றார்.

 

நடன நிகழ்வின் இயக்குநர் நடிகர் ஹரிக்குமார் பேசுகையில், “அருண் ஈவண்ட்ஸ், ரன் டு வின் எனப் போட்டிருக்கிறார்கள். அதே போலத்தான் அருண் 24 நாலு மணி நேரமும் ஓடிக்கொண்டே இருக்கிறார். Clental ரமேஷ் சார் அருணுக்கு உதவியாக,  இந்த நிகழ்வை இணைந்து வழங்குகிறார். அவருக்கு நன்றி.  G Star properties நமது டைட்டில் ஸ்பான்சராக வந்துள்ளனர்,  உமாபதி,  ஜெய்சங்கர் இருவருக்கும் நன்றி. ஐவா நிறுவனத்திற்கும் நன்றி. திரையில் 10 வருடம் கடந்தாலே பெரிய விசயம், 30, 40 வருசம் எல்லாம் இருப்பது ஆசிர்வாதம். அதிலும் கோரியொகிராஃபராக இருப்பதும், இப்போதும் ஆட தயாராக இருப்பதும் அதிசயம் தான். அவரோடு இத்தனை நாள் நான் இருக்கிறேன் என்பது எனக்கு பெருமை. இந்த நிகழ்வை ஆரம்பித்த கணத்தில் இருந்து இப்போது வரை, அதைப்பற்றி பேசிக்கொண்டே இருந்தார், ரிகர்சல் எடுத்து வருகிறார். இன்னும் பல விசயங்கள் இருக்கிறது. அருண் ஈவண்ட்ஸுக்கு மீண்டும் நன்றி. அனைவருக்கும் நன்றி.” என்றார்.

 

அருண் ஈவண்ட்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் அருண் பேசுகையில், “நிறைய மியூசிக் கான்சர்ட் செய்துள்ளேன் ஆனால் டான்ஸ் ஷோ செய்ய வேண்டும் என ஆசை. அதை எப்படி சாத்தியமாக்கலாம் என யொசித்து வந்தேன். அந்த வாய்ப்பை வழங்கிய பிரபுதேவா மாஸ்டருக்கு நன்றி. இப்போதே 23000 டிக்கெட்கள் விற்றுத்தீர்ந்து விட்டது. ஓபன் கிரவுண்டில் 5.1 சவுண்ட் செய்துள்ளோம்: ரசிகர்களுக்கு புது அனுபவமாக இருக்கும். இந்த நிகழ்வுக்கு உறுதுணையாக வேல்ஸ் ஐசரி கணேஷ் சாருக்கு நன்றி. இந்த ஷொ கண்டிப்பாக புதிய அளவில் வேறு மாதிரி அனுபவமாக இருக்கும் நன்றி.” என்றார்.

 

Prabhudeva Vibe

 

தயாரிப்பாளர் கலைப்புலி தாணு பேசுகையில், “பிரபுதேவாவை கிட்டதட்ட 30 வருடமாக கவனித்து வருகிறேன். என் குடும்பத்தில் ஒருவர். அருண் ஈவண்ட்ஸ் அருண், எப்போதும் புதுப்புது விசயங்கள் செய்து வருகிறார்,  எங்கள் நிறுவனத்தில் பல புதிய விசயங்களை செய்வோம்,  அதைத் தாண்டி அருண் இந்நிகழ்ச்சியில் பல புதிய விசயங்கள் செய்துள்ளார். காலத்தால் அழிக்க முடியாத நிகழ்வாக இந்த நிகழ்ச்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.” என்றார்.

 

வேல்ஸ் ஃபிலிம் இண்டநேஷனல் நிறுவனர் ஐசரி கணேஷ் பேசுகையில், “பிரபுதேவா மாஸ்டருடன் நான் 30 வருடங்களாக பழகி வருகிறேன். அவரிடம் இந்த மாதிரி ஒரு நிகழ்வை ஏன் நீங்கள் நடத்தக் கூடாதென கேட்டுள்ளேன், இதுவரையிலும் செய்யாமலே இருந்தார். இப்போது இந்தியாவில் முதல்முறையாக இந்த டான்ஸ் நிகழ்வு நடக்கிறது. இதை சாத்தியப்படுத்திய அருண் ஈவண்ட்ஸுக்கு நன்றி, இந்த நிகழ்ச்சிக்கு என்னால் முடிந்த அனைத்து உதவிகளும் செய்வேன் நன்றி.” என்றார்.

 

முன்னதாக ‘ஐயா’ (iBa) நிறுவனத்தின் ‘டிகெட் ஐபா’ (Ticket iBa) என்ற இணையதளத்தை துவக்கி வைத்த பிரபுதேவா, நிகழ்ச்சியின் முதல் 25,000 டிக்கெட்களை ஐபா நிறுவனத்தின் திட்ட இயக்குனர் பி.கே.அபி மன்னனிடம் வழங்கினார்.

Related News

10278

துல்கர் சல்மானை நடிப்பு சக்கரவர்த்தியாக மக்கள் கொண்டாடுவார்கள் - நடிகர் ராணா பாராட்டு
Thursday November-06 2025

இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...

சினிமாவில் வெற்றி பெற 4 விசயங்கள் அவசியம்! - இயக்குநர் எஸ்.பி.முத்துராமன்
Thursday November-06 2025

பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...

’ஆர்யன்’ பட கிளைமாக்ஸ் மாற்றம்! - வெற்றி விழாவில் படக்குழு தகவல்
Wednesday November-05 2025

அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...

Recent Gallery