தீபாவளிக்கு வெளியான விஜயின் ‘மெர்சல்’ தமிழகம் மட்டும் இன்றி தென் இந்தியா முழுவதும் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. திரையிட்ட அனைத்து பகுதிகளிலும் வசூலில் சாதனை படைத்து வரும் இப்படத்தில் டிஜிட்டல் மணி, ஜி.எஸ்.டி உள்ளிட்டவை குறித்து உள்ள வசனங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
”7 சதவீதம் ஜிஎஸ்டி வாங்கும் சிங்கப்பூரில் இலவச மருத்துவம் கிடைக்கும் போது, 28 சதவீதம் ஜிஎஸ்டி வாங்கும் இந்தியாவின் இலவச மருத்துவம் இல்லை ஏன்?” உள்ளிட்ட பல வசனங்களு ரசிகர்கள் கைதட்டுகிறார்கள்.
இந்த நிலையில், ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா தொடர்பான வசனங்களுக்கு பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இன்னும் 2 நாட்களில் அந்த காட்சிகளை நீக்க பாஜக கெடு விதித்தது.
இந்த நிலையில், ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா காட்சிகளை நீக்க, ‘மெர்சல்’ தயாரிப்பு தரப்பு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே பல பிரச்சினைகளை கடந்து படம் வெளியாகியுள்ளதால், இதுபோன்ற எதிர்ப்புகளால் எங்கே இன்னும் பல பிரச்சினைகளை சந்திக்க நேரிடுமோ என்ற அச்சத்தில் மெர்சல் தயாரிப்பாளர் முரளி காட்சிகளை நீக்கும் முடிவுக்கு வந்துள்ளாராம்.
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...