தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவராக உள்ள விஜய், ‘மெர்ச’ படத்தின் வெற்றியாலும், படத்தில் பேசப்பட்ட வசனங்களாலும், மக்களால் கவனிக்கப்படும் நடிகராகியுள்ளார். அவரது மெர்சல் படம் ரிலிஸிற்கு முன்பாக பல பிரச்சினைகளை சந்தித்த நிலையில், ரிலிஸிற்கு பிறகு பல பிரச்சினைகளை எதிர்க்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், விஜய் தனது தான் சொன்ன ஒன்றை கடைபிடிக்காமல் போனதால், ரசிகர்கள் அவரிடம் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
அதாவது, ‘துப்பாக்கி’ படத்தின் போது விஜய் சிகரெட் புகைப்பது போன்ற புகைப்படம் ஒன்று வெளியானது. பிறகு அந்த காட்சி படத்தில் இருந்து நீக்கப்பட்டதோடு, ”இனி என் படங்களில் புகைப்பிடிக்கும் காட்சி வராது” என்று விஜய் கூறினார்.
ஆனால், ‘மெர்சல்’ படத்தில் மேஜிக் நிபுணராக வரும் விஜய், பல காட்சிகளில் சிகரெட் புகைத்தபடி இருக்கிறார். இதற்கு ரசிகர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். விஜய்க்கு ஏராளமான சிறுவர்கள் ரசிகர்களாக இருப்பதால், புகை பிடிக்கும் காட்சியில் விஜய் நடித்திருப்பதை யாரும் விரும்பவில்லை.
அதேபோல், புகை பிடிக்க மாட்டேன், என்று சொல்லிவிட்டு, நீங்களே இப்படி செய்யலாமா? என்று பல ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விஜயிடம் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...