‘சதுரங்க வேட்டை 2’, ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’, ‘வணங்காமுடி’, ‘நரகாசூரன்’ என பிஸியாக நடித்து வரும் அரவிந்த்சாமி, அடுத்ததாக் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாஸ்கர் ஒரு ராஸ்கர், சதுரங்க வேட்டை 2 படங்களின் படப்பிடிப்பு முடிவடைந்ததை தொடர்ந்து, வணங்காமுடி படமும் இறுதி கட்டத்தை எட்டிவிட்டதாம். இதையடுத்து, நரகாசூரன் படம் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், மணிரத்னம் படத்திற்காக தேதிகளை ஒதுக்கியுள்ள அரவிந்த்சாமி, அப்படியே கே.எஸ்.ரவிக்குமாருக்கும் கால்ஷீட் கொடுத்திருக்கிறாராம்.
பாலகிருஷ்ணாவை வைத்து கே.எஸ்.ரவிக்குமார் இயக்கி வரும் தெலுங்கு படம் முடிந்த பிறகு, அரவிந்த்சாமியின் படம் தொடங்க உள்ளதாம். பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தை தயாரித்து வரும் நிறுவனம் தான் இந்த படத்தையும் தயாரிக்க இருக்கிறதாம்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...