Latest News :

மக்கள் கொண்டாடும் ‘உயிர் மூச்சு’! - திரையரங்குகள் கிடைக்காமல் படக்குழு தவிப்பு
Thursday April-03 2025

சிறு முதலீட்டு திரைப்படங்களுக்கு போதிய திரையரங்குகள் கிடைப்பதில்லை, என்ற குற்றச்சாட்டு தமிழ் சினிமாவில் பழகிப்போன ஒன்று தான் என்றாலும், சமூக அக்கறையோடு, நல்ல திரைப்படமாக உருவாகி மக்களால் கொண்டாப்படும் திரைப்படங்களுக்கும் திரையரங்குகள் கிடைக்காமல் தவிப்பது தமிழ் சினிமாவின் சாபக்கேடு என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில், இன்று (ஏப்ரல் 3) திரையரங்குகளில் வெளியாகியுள்ள ‘உயிர் மூச்சு’ மக்களால் கொண்டாப்பட்டு மாபெரும் வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், போதிய திரையரங்குகள் கிடைக்காமல் படக்குழு தவித்து வருகிறது.

 

முதலுதவி பற்றிய அமையக்கருத்துடன், வரதட்சணை கொடுமை, லஞ்சம் ஊழல், மதுபோதையால் ஏற்படும் சீரழிவு பற்றி கதைக்களத்துடன், சமூக அக்கறையோடு உருவாகியுள்ள ‘உயிர் மூச்சு’ திரைப்படத்தில் டெலிபோன் ராஜ் வில்லனாக அறிமுகமாகி மிரட்டியிருக்கிறார். 

 

விறுவிறுப்பான திரைக்கதை, எதிர்பார்க்காத திருப்பங்கள் என சுவாரஸ்யமான படமாக வெளியாகியிருக்கும் இப்படத்தை பிராட்வே சுந்தர் இயக்கியிருக்கிறார். தீபா சங்கர், மீசை ராஜேந்திரன், கிங்காங், பெஞ்சமின், விக்னேஷ்,சஹானா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். 

 

தூத்துக்குடியில் மட்டும் இன்று உயிர் மூச்சு திரைப்படம் ரிலீஸ் ஆனது. முதல் காட்சி மக்கள் கூட்டத்தில் நிரம்பி வழிந்தது. படம் முழுவதும் ஆர வாரத்துடன் மக்கள் படத்தை ரசித்தனர். கிங் காங் படம் முழுவதும் காமெடியில் கலக்கி இருக்கிறார், தீபாவின் நடிப்பு வியக்க வைக்கிறது, பெஞ்சமின் இதுவரை நடித்திராத அருமையான வேடத்தில் நடித்திருக்கிறார். டெலிபோன்ராஜ் தமிழ் சினிமா துறையில் இருந்து முதன்முதலாக  வில்லனாக அறிமுகமாகி, ஒரு கிராமத்து வில்லனாக பயங்கரமாக மிரட்டி இருக்கிறார். மீசை ராஜேந்திரன் நடிப்பில் கம்பீரம் தெரிகிறது. இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக விக்னேஷ் மற்றும் கதாநாயகியாக சஹானா நடித்திருக்கிறார்கள். கதையை அத்திமரப்பட்டி விவசாயி ஜோதிமணி எழுதி இருக்கிறார்.

 

இந்த திரைப்படத்தை இயக்கிய பிராட்வே சுந்தர் ஏற்கனவே அரசியல் சதுரங்கம், விதி எண் 3,  கருப்பு பக்கம் ஆகிய திரைப்படங்களை இயக்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படத்தில் நான்கு பாடல்களை இயக்குனர் பிராட்வே சுந்தர் எழுதி பாடியிருக்கிறார். உயிர் மூச்சு திரைப்படத்திற்கு அவரே இசையமைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. திரைப்படத்தில் வரும் நான்கு பாடல்களும் மனதில் நீங்காத இடம்பெறுகிறது..

 

'ஆத்தா உன்ன பாத்தா' என்ற பாடல் உப்பள தொழிலாளர்களின் வாழ்வியலை மையமாக கொண்டுள்ளது. படம் பார்த்த முதியவர் ஒருவர் கூறும்போது ..இந்த திரைப்படம் தமிழகம் முழுவதும் ரிலீசாக வேண்டும் நான் 22 வருடங்களுக்கு பிறகு சினிமா தியேட்டர் வந்திருக்கிறேன், இந்த திரைப்படம் மிக அருமையாக உள்ளது நான் அடுத்த காட்சியும் பார்த்து விட்டு தான் வீட்டுக்கு செல்வேன் என்று கூறினார். நல்ல திரைப்படங்களுக்கு அதிக தியேட்டர்கள் கிடைக்க வேண்டும் என்பது ரசிகர்களின் கருத்து.

Related News

10407

’பாம்’ படம் மூலம் காமெடியில் கலக்க வரும் அர்ஜுன் தாஸ்!
Monday September-08 2025

’கைதி’, ‘மாஸ்டர்’ போன்ற படங்களில் வில்லனாக மிரட்டிய அர்ஜுன் தாஸ், தற்போது நாயகனாக பலதரப்பட்ட நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டு பெற்று வருகிறார்...

ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில் வசனம் இல்லாமல் வெளியான ‘உஃப் யே சியாபா’!
Friday September-05 2025

லவ் பிலிம்ஸ் வழங்கும் லவ் ரஞ்சன் மற்றும் அங்கூர் கார்க் தயாரிப்பில்  பிரபல இயக்குநர்  ஜி...

Recent Gallery