‘லப்பர் பந்து’ வெற்றியை தொடர்ந்து நடிகர் ஹரிஷ் கல்யாண் நாயகனாக நடிக்கும் புதிய படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஹரிஷ் கல்யாணின் 15 வது திரைப்படமாக உருவாகும் இப்படத்தை இயக்குநர் வினீத் வரபிரசாத் இயக்குகிறார். ஐ.டி.ஏ.ஏ புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் நாயகியான ப்ரீத்தி முகுந்தன் நடிக்கிறார்.
வடசென்னை வாழ் இளைஞர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி ஹைப்பர் கான்செப்டில், வித்தியாசமான ஆக்சன் திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது. லிஃப்ட் படம் மூலம் கவனம் ஈர்த்த, இயக்குநர் வினீத் வரபிரசாத் இப்படத்தை இயக்கியுள்ளார். ஐ.டி.ஏ.ஏ புரொடக்ஷன்ஸ் பெரும் பொருட்செலவில் பிரம்மாண்ட படைப்பாக இப்படத்தைத் தயாரித்துள்ளனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு, சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நடத்தப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு, இன்னும் சில தினங்களில் முழுமையாக முடிவடையவுள்ளது. விரைவில் இப்படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் துவங்கவுள்ளது.
இந்த நிலையில், இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படம் தற்காலிகமாக HK15 என்று அழைக்கப்படுகிறது. இப்படத்தின் அறிவிப்பை வெளியிட்ட படக்குழு இரத்தம் தெறிக்க ஹரிஷ் கல்யாணின் கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தும் போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

கார்த்திக் அசோகன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு பிரிட்டோ மைக்கேல் இசையமைக்கிறார். மதன்.ஜி படத்தொகுப்பு செய்ய, பாபா பாஸ்கர் நடனக் காட்சிகளை வடிவமைக்கிறார்.
இயக்குநர் நிதிஷ் சகாதேவ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'தலைவர் தம்பி தலைமையில்' படத்தில் ஜீவா, தம்பி ராமையா, இளவரசு, பிரார்த்தனா நாதன், ஜெய்வந்த், ஜென்சன் திவாகர், மணிமேகலை, சர்ஜின் குமார், ராஜேஷ் பாண்டியன், சுபாஷ் கண்ணன், அமித் மோகன், அனு ராஜ், சரத் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்...
தமிழ் திரையுலகில் முன்னணி வசூல் நாயகனாக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன், பல்வேறு ஜானர்களில் தனது அபாரமான நடிப்புத் திறனை நிரூபித்துள்ளார்...
விஜய் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் வெளியாகாது, என்று தயாரிப்பு தரப்பு நேற்று இரவு அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது...