தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் பல இனிமையான பாடல்களை பாடியுள்ள பழம்பெரும் பாடகி எஸ்.ஜானகி, வரும் 28 ஆம் தேதிக்கு பிறகு திரைப்படம் மற்றும் இசை நிகழ்ச்சிகளில் தான் பாடப்போவதில்லை என்று அறிவித்துள்ளார்.
ஏற்கனவே, தனது இசை பயணத்திற்கு விடை கொடுத்த எஸ்.ஜானகி, நெருங்கிய நண்பர்களது வேண்டுகோளுக்கு இனங்க சில திரைப்படங்களிலும், இசை நிகழ்ச்சிகளிலும் மீண்டும் பாடி வந்த நிலையில், கடந்த ஆண்டு ’10 கல்பனைகள்’ என்ற மலையாள படத்தில் பாடினார்.
இந்த நிலையில் வருகிற 28 ஆம் தேதி முதல் சினிமா மற்றும் இசை நிகழ்ச்சிகளில் பாட போவதில்லை என்று எஸ். ஜானகி மலையாள பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். பேட்டியில் மேலும் கூறிய எஸ்.ஜானகி, “இன்றைய இசை உலகில் பல பாடகர்கள் திறமையை வெளிப்படுத்தி வருகிறார்கள். சிறப்பாகவும், இனிமையாகவும் பாடுகிறார்கள்.
நான், வருகிற 28 ஆம் தேதி மைசூரில் நடைபெறும் அறக்கட்டளை இசை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கிறேன். அந்த நிகழ்ச்சி தான் இசை உலகில் எனது கடைசி நிகழ்ச்சியாக இருக்கும். அதன் பிறகு பொது மேடைகளில், இசை நிகழ்ச்சிகளில் நான், பங்கேற்க மாட்டேன். எளிய வாழ்க்கை வாழ விரும்புகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்./
கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான KVN Productions வெங்கட் கே...
ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில், சாய் காவியா சாய் கைலாஷ் வழங்க, பத்மராஜு ஜெய்சங்கர் தயாரிப்பில், பாஸ்கர் சதாசிவம் இயக்கத்தில், சமூக அக்கறை மிக்க களத்தில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’உருட்டு உருட்டு’...
இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...