Latest News :

28 ஆம் தேதியோடு பாடுவதை நிறுத்துகிறார் எஸ்.ஜானகி!
Saturday October-21 2017

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் பல இனிமையான பாடல்களை பாடியுள்ள பழம்பெரும் பாடகி எஸ்.ஜானகி, வரும் 28 ஆம் தேதிக்கு பிறகு திரைப்படம் மற்றும் இசை நிகழ்ச்சிகளில் தான் பாடப்போவதில்லை என்று அறிவித்துள்ளார்.

 

ஏற்கனவே, தனது இசை பயணத்திற்கு விடை கொடுத்த எஸ்.ஜானகி, நெருங்கிய நண்பர்களது வேண்டுகோளுக்கு இனங்க சில திரைப்படங்களிலும், இசை நிகழ்ச்சிகளிலும் மீண்டும் பாடி வந்த நிலையில், கடந்த ஆண்டு ’10 கல்பனைகள்’ என்ற மலையாள படத்தில் பாடினார்.

 

இந்த நிலையில் வருகிற 28 ஆம் தேதி முதல் சினிமா மற்றும் இசை நிகழ்ச்சிகளில் பாட போவதில்லை என்று எஸ். ஜானகி மலையாள பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். பேட்டியில் மேலும் கூறிய எஸ்.ஜானகி, “இன்றைய இசை உலகில் பல பாடகர்கள் திறமையை வெளிப்படுத்தி வருகிறார்கள். சிறப்பாகவும், இனிமையாகவும் பாடுகிறார்கள்.

 

நான், வருகிற 28 ஆம் தேதி மைசூரில் நடைபெறும் அறக்கட்டளை இசை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கிறேன். அந்த நிகழ்ச்சி தான் இசை உலகில் எனது கடைசி நிகழ்ச்சியாக இருக்கும். அதன் பிறகு பொது மேடைகளில், இசை நிகழ்ச்சிகளில் நான், பங்கேற்க மாட்டேன். எளிய வாழ்க்கை வாழ விரும்புகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்./

Related News

1047

இளமை துள்ளும் காதல் படைப்பாக உருவாகியுள்ள ‘சரீரம்’!
Monday September-15 2025

ஜி.வி.பி பிக்சர்ஸ் வழங்கும், இயக்குநர் ஜி...

பூஜையுடன் தொடங்கிய ‘காட்ஸ்ஜில்லா’ திரைப்பட படப்பிடிப்பு
Monday September-15 2025

சினிமா மீடியா அண்ட் என்டர்டெய்ன்மென்ட் லிமிடெட் - தினேஷ் ராஜ் வழங்கும், க்ரியேடிவ் என்டர்டெய்னர்ஸ் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் மற்றும் PGS புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் ‘காட்ஸ்ஜில்லா’...

மக்கள் என் கருத்துகளை ஏற்றுக்கொண்டனர் - இயக்குநர் பா.இரஞ்சித் பெருமிதம்
Sunday September-14 2025

லேர்ன் & டீச் புரொடக்‌ஷன்ஸ் ( Learn & Teach Production) சார்பில் எஸ்...

Recent Gallery