தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் பல இனிமையான பாடல்களை பாடியுள்ள பழம்பெரும் பாடகி எஸ்.ஜானகி, வரும் 28 ஆம் தேதிக்கு பிறகு திரைப்படம் மற்றும் இசை நிகழ்ச்சிகளில் தான் பாடப்போவதில்லை என்று அறிவித்துள்ளார்.
ஏற்கனவே, தனது இசை பயணத்திற்கு விடை கொடுத்த எஸ்.ஜானகி, நெருங்கிய நண்பர்களது வேண்டுகோளுக்கு இனங்க சில திரைப்படங்களிலும், இசை நிகழ்ச்சிகளிலும் மீண்டும் பாடி வந்த நிலையில், கடந்த ஆண்டு ’10 கல்பனைகள்’ என்ற மலையாள படத்தில் பாடினார்.
இந்த நிலையில் வருகிற 28 ஆம் தேதி முதல் சினிமா மற்றும் இசை நிகழ்ச்சிகளில் பாட போவதில்லை என்று எஸ். ஜானகி மலையாள பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். பேட்டியில் மேலும் கூறிய எஸ்.ஜானகி, “இன்றைய இசை உலகில் பல பாடகர்கள் திறமையை வெளிப்படுத்தி வருகிறார்கள். சிறப்பாகவும், இனிமையாகவும் பாடுகிறார்கள்.
நான், வருகிற 28 ஆம் தேதி மைசூரில் நடைபெறும் அறக்கட்டளை இசை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கிறேன். அந்த நிகழ்ச்சி தான் இசை உலகில் எனது கடைசி நிகழ்ச்சியாக இருக்கும். அதன் பிறகு பொது மேடைகளில், இசை நிகழ்ச்சிகளில் நான், பங்கேற்க மாட்டேன். எளிய வாழ்க்கை வாழ விரும்புகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்./
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...