மெர்சல் விவகாரத்தில் திரையுலகமே விஜய்க்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், தற்போது ரஜினிகாந்தும் விஜய்க்கு ஆதரவாக ட்விட்டரில் கருத்து தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜி.எஸ்.டி-க்கு எதிராக மெர்சல் படத்தில் இருக்கும் வசனங்களை நீக்க கூடாது என்றும், மக்களின் குரலாக ஒலிக்கும் வசனங்களை படத்தில் வைத்த இயக்குநர் அட்லி மற்றும் நடிகர் விஜய் உள்ளிட்ட மெர்சல் குழுவினருக்கு தனது வாழ்த்துக்கள், என்றும் அந்த ட்விட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், அந்த ட்விட்டர் கணக்கு ரஜினிகாந்துடையது அல்ல என்றும், அது போலியான கணக்கும் என்று ரஜினிகாந்த் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
கமல்ஹாசன் உள்ளிட்ட பல நடிகர்களும், இயக்குநர்களும் மெர்சல் விவகாரத்தில் பா.ஜ.க-வுக்கு எதிர்ப்பும், விஜய்க்கு ஆதரவும் தெரிவித்து வரும் நிலையில், ரஜினிகாந்த் இதுவரை எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை, என்பது தான் உண்மை.
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...