தேசிய அளவில் ’மெர்சல்’ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், விஜயின் அடுத்த ரிலீஸ் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.
தீபாவளியன்று உலகம் முழுவதும் மெர்சல் வெளியான நிலையில், அதன் தெலுங்கு டப்பிங்கான ‘அதிரிந்தி’ வரும் 26 ஆம் தேதி ரிலிஸாக உள்ளது.
மத்திய அரசின் பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி. வரி, டிஜிட்டல் இந்தியா போன்ற வசனங்கள் ஆகியவை படத்தில் இடம்பெற்றுள்ளதற்கு, தமிழக பா.ஜ.க தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதோடு, படத்திற்கு மிரட்டலும் விடுத்தனர். இதையடுத்து கமல் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர்.
மேலும், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தேசிய தலைவர்களும் மெர்சல் படத்திற்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்ததால், தற்போது தேசிய அளவில் மெர்சல் ரீச் ஆகியுள்ளது.
இந்த நிலையில், மெர்சல் படத்தின் தெலுங்கு டப்பிங்கான ‘அதிரிந்தி’ வரும் 26 ஆம் தேதி ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் ரிலீஸ் ஆக உள்ளது. அங்கு படத்தின் மீது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...