’பருத்திவீரன்’ படம் மூலம் சித்தப்பாவாக பிரபலமான நடிகர் சரவணன் மற்றும் நம்ரிதா எம்.வி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இணையத் தொடர் ‘சட்டமும் நீதியும்’. ஜீ5-ன் ஒரிஜினலாக உருவாகியுள்ள இந்த இணையத் தொடர் வரும் ஜூலை 18 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளது.
புதுமையான களத்தில், சரவணன் வழக்கறிஞராக சரவணன் நடித்திருக்கும் ‘சட்டமும் நீதியும்’ தொடரின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைக் பெற்றுள்ளது. தமிழ் திரைத்துறையில் 35வது ஆண்டைக் கடந்திருக்கும் நடிகர் சரவணன், 15 வருட இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் இந்த தொடர் மூலம் ஹீரோவாக நடித்திருக்கிறார். நடிகர் சரவணனுடன் உறுதியும், உணர்ச்சிகளும் நிறைந்த சக்திவாய்ந்த ஒரு பெண் கதாபாத்திரத்தில் நம்ரிதா.எம்.வி நடித்திருக்கிறார்.
சட்டமும் நீதியும் சீரிஸ் ’குரலற்றவர்களின் குரல்’ எனும் கருத்திலிருந்து உருவாகியுள்ளது. நம்மைச் சுற்றியுள்ள பலர் தங்களது குரலை வெளிப்படுத்த முடியாமல் அமைதியாக இருக்கும்போது, அந்த அமைதியை உடைத்து, தனது உரிமைக்கும் மற்றொருவரின் நலனிற்காகவும் நிற்கும் ஒரு சாதாரண மனிதரின் கதைதான் இது.
அறிமுக இயக்குநர் பாலாஜி செல்வராஜ் இயக்கியிருக்கும் இத்தொடரை ’18 கிரியேட்டர்ஸ்’ நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சசிகலா பிரபாகரன் தயாரித்துள்ளார். உணர்வுப்பூர்வமான கதையுடன், சமூக அக்கறை கொண்ட படைப்பாக இந்த தொடர் உருவாகியுள்ளது.
இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...
திரைத்துறை ஜாம்பவான்கள் கலந்து கொள்ளும் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக தயாரித்து, உருவாக்கி, நடத்துவதன் மூலம் இந்திய ஊடக வெளியில் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ள இந்தியாவின் முன்னணி ஊடகத் தயாரிப்பு மற்றும் திறமை மேலாண்மை நிறுவனமான நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் (Noise and Grains), திரைப்பட தயாரிப்பில் களம் இறங்குகிறது...
‘டாணாக்காரன்’ பட புகழ் இயக்குநர் தமிழ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்திற்கு ‘மார்ஷல்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது...