சர்ச்சையில் சிக்கிய விஜயின் ‘மெர்சல்’ படத்திற்கு திரையுலக பிரமுகர்கள் பலர் ஆதரவு தெரிவித்து வந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்தும் ஆதரவு தெரிவித்திருப்பதாக அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அது போலியான ரஜினிகாந்த் டிவிட்டர் பக்கம் என்று தெரிய வந்தது.
இதையடுத்து, நடிகர்கள் பலர் விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்து வரும் நிலையில் முன்னணி நடிகரான ரஜினிகாந்த், மவுனம் காப்பது ஏன்? என்று ஊடகங்கள் கேள்வி எழுப்பியது.
இந்த நிலையில், நேற்று நள்ளிரவு ரஜினிகாந்த் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ‘மெர்சல்’ படத்தையும் படக்குழுவினரையும் பாராட்டியுள்ளார்.
“மிக முக்கிய பிரச்சனையைப் படத்தில் பேசியுள்ளார்கள், சிறப்பாக உள்ளது! மெர்சல் படக்குழுவிற்கு வாழ்த்துகள்!” என்று ரஜினிகாந்த் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
Important topic addressed... Well done !!! Congratulations team #Mersal
— Rajinikanth (@superstarrajini) October 22, 2017
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...