90களின் இறுதியில் மற்றும் 2000களின் தொடக்கத்தில் தனது மென்மையான நடிப்பால் ரசிகர்களை வசீகரித்த நடிகர் அபாஸ், பத்தாண்டுகளுக்குப் பிறகு தமிழ் சினிமாவிற்கு திரும்பி வருகிறார். இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஜி.வி. பிரகாஷ்குமாருடன் இணைந்து, தற்போது பெயரிடப்படாத ஒரு புதிய படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் அபாஸ்.
இப்படம், பியாண்ட் பிக்சர்ஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பாகும். இதனை ஜெயவர்த்தனன் தயாரிக்க, ஜெய்காந்த் சுரேஷ் இணை தயாரிப்பாளராக உள்ளார். ‘லவ் டுடே’ புகழ் இயக்குநர் மற்றும் நடிகர் பிரதீப் ரங்கநாதனின் முன்னாள் உதவியாளர் மரியா ராஜா இலஞ்செழியன் இப்படத்தை இயக்குகிறார்.
‘லவர்’ திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி மக்களை கவர்ந்த ஸ்ரீ கௌரி பிரியா, கதாநாயகியாக நடிக்கிறார்.
இது ஒரு நகைச்சுவை நிரம்பிய குடும்பக் கொண்டாட்டப் படம் எனக் கூறப்படுகிறது. அனைத்து வயதினரையும் கவரும் படமாக உருவாகுகிறது.
ஜஸ்டின் பிராபகரன் இசையமைக்கும் இப்படத்திற்கு மதன் கிறிஸ்டோபர் ஒளிப்பதிவு செய்கிறார், செல்வா.ஆர்.கே படத்தொகுப்பு செய்ய, குமார் கங்கப்பன் கலை இயக்குநராக பணியாற்றுகிறார். பிரவேண் ராஜா ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது. படத்தின் தலைப்பு மற்றும் பிற தகவல்களை படக்குழு விரைவில் அறிவிக்க உள்ளது.
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...
நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள THE MUSIC ACADEMY-யில் 3-வது ஆண்டாக PROVOKE ART FESTIVAL 2025 கோலாகலமாக நடைபெற்றது...