இங்கிலாந்து நாட்டு ஆங்கில திரைப்படமாக உருவாகியிருக்கும் ‘இன்ஃபிளுன்செர்’ உண்மையான திகில் எது ? என்பதை விவரிக்கும் பரபரப்பான சஸ்பென்ஸ் திரில்லர் மற்றும் திகில் படமாகும். ஒரு தம்பதியினர் அதிகமான பார்வையாளர்களை ஈர்ப்பதற்காக இலங்கையின் பழைய திகில் கதைகளை ஆய்வு செய்ய பயணம் மேற்கொள்கிறார்கள். ஆனால் அவர்களின் பயணம் ஒரு காட்டுக்குள் சிக்கிக் கொள்ளும் பொழுது பயங்கரமான திருப்பத்தை ஏற்படுத்துகிறது. உள்ளூர் குடும்பத்தால் மீட்கப்பட்ட அவர்கள், உண்மையான திகில், மனித இயல்பின் இருளில் தான் இருக்கிறது, என்பதை கண்டுபிடிக்கிறார்கள்.
இங்கிலாந்தைச் சேர்ந்த ஃப்ளோரன்ஸ் சிம்ப்சன் கதாநாயகியாகவும், மால்டாவை சார்ந்த டேன் ஹாலண்ட் நாயகனாகவும், இலங்கை நடிகர்களான துளிகா மரப்பனா, பிரியங்கா அமர்சிங், வனிதா சேனாதிராஜா, தேவ அலோசியஸ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
நீரோ கில்பர்ட் இயக்கியிருக்கும் இப்படத்திற்கு சிவசாந்தகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். சுஜித் ஜெயக்குமார் படத்தொகுப்பு செய்திருக்கிறார். சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு ஈழத்தில் இருந்து புலம்பெயர்ந்த இந்த மூன்று தமிழர்களும் தற்போது இங்கிலாந்து குடிமகன்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தயாரிப்பு நிர்வாகியாக ஞானதாஸ் காசிநாதர் பணியாற்ற, நிர்வாக தலைமையாக செல்லையா சுதர்ஷன் பணியாற்றுகிறார். வி.எஸ்.சிந்து கலை இயக்குநராகவும், பிபின் ஆண்டனி கலர் கிரேடிங் பணியையும் கவனித்துள்ளனர்.
எட்டெர்னல் ஐகான் பிலிம்ஸ் மற்றும் நியூ பிச் நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்தின் முதன்மை தயாரிப்பை ஹரிசங்கர், ஜனார்த்தனம் (இந்தியா), விதுசன் ஆண்டனி (ஜாப்னா) ஆகியோர் மேற்கொண்டுள்ளனர். இணை தயாரிப்பை ராபின் ஏ.டவுன்செண்ட் (இங்கிலாந்து) கவனித்துள்ளார்.

முதன்மை தயாரிப்பாளர்களுள் ஒருவரான ஹரிசங்கர் ஜனார்த்தனம் பிரபல ஒளிப்பதிவாளர் ஜி. பி கிருஷ்ணாவிடம் உதவி ஒளிப்பதிவாளராகவும், இயக்குனர் மிஷ்கின் அழைப்பில் புகைப்படக் கலைஞராக 35 படங்களுக்கு மேல் பணியாற்றியுள்ள இவர், இந்த ஆங்கிலப் படத்தில் முதன்மை தயாரிப்பாளராக தன்னை ஈடுபடுத்திக் கொண்டதோடு. புகைப்படக் கலைஞராகவும், கேஃபராகவும், பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மலையக மற்றும் ஈழத்தமிழ் இளைஞர்கள், யுவதிகள் பங்கேற்றுள்ள இப்படத்தின் டீசர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...
நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள THE MUSIC ACADEMY-யில் 3-வது ஆண்டாக PROVOKE ART FESTIVAL 2025 கோலாகலமாக நடைபெற்றது...