பல சர்ச்சைகளை எதிர்க்கொண்டு வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘மெர்சல்’ படத்தின் மிரட்டும் அளவுக்கு அமோகமாக உள்ளது. படம் வெளியான 5 நாட்களிலேயே ரூ.150 கோடியை வசூல் செய்துவிட்டதாக கூறப்படுகிறது.
பா.ஜ.க-வின் எதிர்பால் தேசிய அளவில் வரவேற்பு பெற்றுள்ள ‘மெர்சல்’ படத்தின் வசனங்களை நீக்க வலியுறுத்திய தமிழக பா.ஜ.க தலைவர்கள், ஐடி ரைடுக்கு உள்ளான விஜய், ஜி.எஸ்.டி குறித்து பேச தகுடியானவர் அல்ல, என்றும் கூறியிருந்தனர்.
இந்த நிலையில், உலகம் முழுவதும் சுமார் 3200 க்கும் மேற்பட்ட திரையரங்கங்களில் ஓடிக்கொண்டிருக்கும் மெர்சல் 5 நாட்களில் ரூ.150 கோடியை வசூலித்துள்ளது. மேலும், சில வாரங்கள் படம் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடும் என்று எதிர்ப்பார்க்கப்படுவதால், இன்னும் பல கோடிகளை படம் வசூல் செய்யும் என்று கூறப்படுகிறது.
இதனால், வருமான வரித்துறை மெர்சல் படத்தின் ஹீரோ விஜய் மற்றும் தயாரிப்பாளர் மீது கண் வைத்துள்ளதாகவும், எனவே, விரைவில் விஜய் உள்ளிட்ட மெர்சல் படக்குழுவினர் வீடுகளில் ஐடி ரைடு நடைபெறலாம், என்றும் கூறப்படுகிறது.
பழம்பெரும் நடிகை சரோஜா தேவி (87) காலமானார்...
சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் டி ஜி தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன் - அர்ஜுன் தியாகராஜன் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி - நித்யா மேனன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'தலைவன் தலைவி' திரைப்படம் ஜூலை 25ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது...
கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான KVN Productions வெங்கட் கே...