Latest News :

தொடரும் மெர்சல் சர்ச்சை - விஜய் மீது போலீசில் புகார்!
Monday October-23 2017

மெர்சல் படம் குறித்து உருவான சர்ச்சை தொடர்ந்துக்கொண்டே இருந்தாலும், அப்படத்தில் இடம்பெற்ற ஜி.எஸ்.டி மற்றும் டிஜிட்டல் மணி குறித்த வசனங்கள் நீக்கப்படவில்லை. அதே சமயம், தேவைப்பட்டால் காட்சிகளை நீக்க தயார், என்று தயாரிப்பு தரப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

 

இருப்பினும், தயாரிப்பாளர்கள் சங்கம், நடிகர்கல் சங்கம் மற்றும் முன்னணி நடிகர் நடிகைகள், இயக்குநர்கள் என்று ஏராளமானோர் மெர்சல் படத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இருப்பினும், தமிழக பா.ஜ.க தலைவர்கள் தொடர்ந்து மெர்சல் படத்தில் இடம்பெற்றுள்ள வசனங்கள் பற்றியும், விஜய் குறித்தும் சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

 

இந்த நிலையில், மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் என்பவர் அண்ணா நகர் காவல் நிலையத்தில் நடிகர் விஜய் மீது புகார் அளித்துள்ளார்.

 

அந்த புகாரில், ஜி.எஸ்.டி க்கு எதிராகப் ஏசிய, வழிபாட்டு தலங்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகர் விஜய் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் விரைவில் விசாரணை நடத்த இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Related News

1064

மதுரையில் நடைபெற்ற ‘கருப்பு’ பட இசை வெளியீட்டு விழா!
Tuesday April-28 2026

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...

கிருஷ்ண ஜன்மபூமியில் வெளியான ’கிருஷ்ணாவதாரம்’ டிரைலர்
Monday April-27 2026

கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...

‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது!
Monday April-27 2026

ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’  படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...

Recent Gallery