தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயலாளர் மற்றும் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக பதவி வகிக்கும் நடிகர் விஷாலின் அலுவலகத்தில் இன்று வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
விஷால் பிலிம் பேக்டரி என்ற நிறுவனத்தின் மூலம் பல படங்களை தயாரித்து வரும் நடிகர் விஷால், இந்நிறுவனத்தின் மூலம் சமீபத்தில் தயாரித்த படம் ‘துப்பறிவாளன்’. இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
இந்த நிலையில், விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தில் மத்திய கலால் துறையின் கீழ் செயல்படும் ஜி.எஸ்.டி நுண்ணறிவு பிரிவினர் சோதனை நடத்தி வருகிறார்கள். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக சோதனை நடத்தப்படு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சோதனையின் போது, நிறுவனத்தை சேர்ந்த விஷால் மற்றும் மேலாளர்கள் யாரும் அங்கு இல்லை.
ஜி.எஸ்.டி-க்கு எதிரான வசனம் இடம்பெற்ற விஜயின் மெர்சல் படத்திற்கு பிஜேபி எதிர்ப்பு தெரிவித்ததற்கு நடிகர் விஷால் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், அவரது அலுவலகத்தில் ஜிஎஸ்டி வரியை ஒழுங்காக செலுத்துகிறார்களா? என்பது குறித்து அறிய நடத்தப்படும் இந்த சோதனையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பழம்பெரும் நடிகை சரோஜா தேவி (87) காலமானார்...
சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் டி ஜி தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன் - அர்ஜுன் தியாகராஜன் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி - நித்யா மேனன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'தலைவன் தலைவி' திரைப்படம் ஜூலை 25ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது...
கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான KVN Productions வெங்கட் கே...