தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயலாளர் மற்றும் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக பதவி வகிக்கும் நடிகர் விஷாலின் அலுவலகத்தில் இன்று வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
விஷால் பிலிம் பேக்டரி என்ற நிறுவனத்தின் மூலம் பல படங்களை தயாரித்து வரும் நடிகர் விஷால், இந்நிறுவனத்தின் மூலம் சமீபத்தில் தயாரித்த படம் ‘துப்பறிவாளன்’. இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
இந்த நிலையில், விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தில் மத்திய கலால் துறையின் கீழ் செயல்படும் ஜி.எஸ்.டி நுண்ணறிவு பிரிவினர் சோதனை நடத்தி வருகிறார்கள். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக சோதனை நடத்தப்படு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சோதனையின் போது, நிறுவனத்தை சேர்ந்த விஷால் மற்றும் மேலாளர்கள் யாரும் அங்கு இல்லை.
ஜி.எஸ்.டி-க்கு எதிரான வசனம் இடம்பெற்ற விஜயின் மெர்சல் படத்திற்கு பிஜேபி எதிர்ப்பு தெரிவித்ததற்கு நடிகர் விஷால் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், அவரது அலுவலகத்தில் ஜிஎஸ்டி வரியை ஒழுங்காக செலுத்துகிறார்களா? என்பது குறித்து அறிய நடத்தப்படும் இந்த சோதனையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...