‘மெர்சல்’ படத்தின் சர்ச்சையை தொடர்ந்து விஜய் அரசியலுக்கு வருவார் என்று கூறப்பட்டு வரும் நிலையில், விஜய் அரசியலுக்கு வர வேண்டும், என்று ஒருவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.
அவர் வேறு யாருமல்ல, விஜயின் தந்தையான இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர். ஏற்கனவே அரசியல் பாதையில் சென்ற விஜய் பல இன்னல்களை சந்தித்ததற்கு எஸ்.ஏ.சந்திரசேகர் தான் மிக முக்கிய காரணம்.
இந்த நிலையில், மெர்சல் விவகாரம் குறித்து தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள எஸ்.ஏ.சந்திரசேகர், விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்பது எனது தனிப்பட்ட ஆசை. ஆனால், அரசியலுக்கு அவர் வருவது குறித்து அவர் தான் முடிவு எடுப்பார்.
விஜயின் கோபத்தின் வெளிப்பாடே மெர்சல் படம். விஜய் ஒரு தலைவராக உருவாகி அவரை நம்பியுள்ளவர்களுக்கு மாற்றத்தை தர வேண்டும். நடிகர் விஜயின் மீது மதச்சாயம் பூச வேண்டாம்.” என்று தெரிவித்துள்ளார்.
ரஜினி, கமல், விஷால் என்று அரசியலில் ஈடுபட இருக்கும் நடிகர்களில் விஜயும் இணைந்துள்ளார்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...