Latest News :

விஜய் அரசியலுக்கு வர வேண்டும் - சொன்னது யார் தெரியுமா?
Tuesday October-24 2017

‘மெர்சல்’ படத்தின் சர்ச்சையை தொடர்ந்து விஜய் அரசியலுக்கு வருவார் என்று கூறப்பட்டு வரும் நிலையில், விஜய் அரசியலுக்கு வர வேண்டும், என்று ஒருவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.

 

அவர் வேறு யாருமல்ல, விஜயின் தந்தையான இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர். ஏற்கனவே அரசியல் பாதையில் சென்ற விஜய் பல இன்னல்களை சந்தித்ததற்கு எஸ்.ஏ.சந்திரசேகர் தான் மிக முக்கிய காரணம்.

 

இந்த நிலையில், மெர்சல் விவகாரம் குறித்து தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள எஸ்.ஏ.சந்திரசேகர், விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்பது எனது தனிப்பட்ட ஆசை. ஆனால், அரசியலுக்கு அவர் வருவது குறித்து அவர் தான் முடிவு எடுப்பார்.

 

விஜயின் கோபத்தின் வெளிப்பாடே மெர்சல் படம். விஜய் ஒரு தலைவராக உருவாகி அவரை நம்பியுள்ளவர்களுக்கு மாற்றத்தை தர வேண்டும். நடிகர் விஜயின் மீது மதச்சாயம் பூச வேண்டாம்.” என்று தெரிவித்துள்ளார்.

 

ரஜினி, கமல், விஷால் என்று அரசியலில் ஈடுபட இருக்கும் நடிகர்களில் விஜயும் இணைந்துள்ளார்.

Related News

1069

இளமை துள்ளும் காதல் படைப்பாக உருவாகியுள்ள ‘சரீரம்’!
Monday September-15 2025

ஜி.வி.பி பிக்சர்ஸ் வழங்கும், இயக்குநர் ஜி...

பூஜையுடன் தொடங்கிய ‘காட்ஸ்ஜில்லா’ திரைப்பட படப்பிடிப்பு
Monday September-15 2025

சினிமா மீடியா அண்ட் என்டர்டெய்ன்மென்ட் லிமிடெட் - தினேஷ் ராஜ் வழங்கும், க்ரியேடிவ் என்டர்டெய்னர்ஸ் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் மற்றும் PGS புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் ‘காட்ஸ்ஜில்லா’...

மக்கள் என் கருத்துகளை ஏற்றுக்கொண்டனர் - இயக்குநர் பா.இரஞ்சித் பெருமிதம்
Sunday September-14 2025

லேர்ன் & டீச் புரொடக்‌ஷன்ஸ் ( Learn & Teach Production) சார்பில் எஸ்...

Recent Gallery