திரைப்பட மற்றும் டிவி தொடர் நடிகர் தாடி பாலாஜிக்கும், அவரது மனைவி நித்யாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இதற்கிடையே தாடி பாலாஜி குடித்துவிட்டு தன்னை அடித்து துன்புறுத்துவதாக நித்யா போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளிக்க, தாடி பாலாஜியோ நித்யா தனது ஆண் நண்பர்களுடன் சேர்ந்துக்கொண்டு தன்னை மிரட்டுவதாக புகார் அளித்தார்.
மேலும், தாடி பாலாஜி தனது மனைவி மற்றும் குழந்தைகளை கொடுமைப்படுத்துவது போன்ற வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்த, போலீசார் நித்யாவிடம் நடத்திய விசாரணையில் அவர் தனது ஆண் நண்பருக்கு செல்போன் பரிசாக வழங்கியது தெரிய வந்தது. ஆனால், இதை மறுத்த நித்யா, பாலாஜி நடிகர் என்பதால் போலீஸ் அவருக்கு ஆதரவாக செயல்படுவதாக் புகார் கூறியதோடு, தான் தற்கொலை செய்துக்கொள்வேன் என்றும் மிரட்டினார்.
இந்த நிலையில் இன்று காலை 11 மணியளவில் அண்ணாநகரில் உள்ள போலீஸ் துணை கமிஷனர் அலுவலகத்தில் நடிகர் தாடி பாலாஜியிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவரிடம் போலீஸ் துணை கமிஷனர் டாக்டர் சுதாகர் விசாரணை நடத்தினார். இது சுமார் 2 மணிநேரத்துக்கும் மேலாக நடந்தது. அப்போது தாடி பாலாஜியுடன் அவரது வழக்கறிஞர் உடன் இருந்தார்.
கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான KVN Productions வெங்கட் கே...
ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில், சாய் காவியா சாய் கைலாஷ் வழங்க, பத்மராஜு ஜெய்சங்கர் தயாரிப்பில், பாஸ்கர் சதாசிவம் இயக்கத்தில், சமூக அக்கறை மிக்க களத்தில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’உருட்டு உருட்டு’...
இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...