Latest News :

மலையாளிகள் நடத்திய போராட்டம் - கூடியது விஜய் மவுசு!
Wednesday October-25 2017

விஜயின் ‘மெர்சல்’ படத்தில் இடம்பெற்ற வசனங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த தமிழக பா.ஜ.க தற்போது அமைதியாகிவிட்டாலும், விஜய்க்கு ஆதரவு தெரிவிப்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்துக்கொண்டே போகிறது.

 

இந்த நிலையில், மெர்சல் படத்திற்கு ஆதரவாக கேரள மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. திருவனந்தபுரத்தில் நேற்று நடைபெற்ற இந்த போராட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான  எம்.பி சசிதரூர் கலந்துக்கொண்டார்.

 

போராட்டத்தில் பேசிய சசிதரூர், “சமூக, அரசியல் கருத்துகளுடன் சினிமா எடுப்பது ஜனநாயக உரிமை. அப்படம் தணிக்கை செய்யப்பட்ட பிறகு, அதை எதிர்க்க யாருக்கும் உரிமை இல்லை. ஆனால், ‘மெர்சல்‘ படத் தயாரிப்பாளர்களை பா.ஜனதா மிரட்டுகிறது. இது ஏற்புடையதல்ல.

 

ஜி.எஸ்.டி. தொடர்பான வசனம் சரியானதுதான். ஜி.எஸ்.டி.யை பொதுமக்களும், வணிகர்களும் எதிர்ப்பதால், அதை வசனமாக வைப்பதில் தவறு இல்லை. அதை நீக்க தேவையில்லை. இப்பிரச்சினையில், நடிகர் விஜயின் மதத்தை பற்றி பா.ஜனதா பேசுகிறது. ஒருவரின் மதம் என்ன என்று பார்த்த பிறகா, நாம் சினிமாவுக்கு செல்கிறோம்?” என்று தெரிவித்தார்.

 

ஒரு நடிகருக்காக ஒரு தேசிய கட்சி போராட்டம் நடத்தியிருப்பது, அதிலும் தமிழ் சினிமா நடிகருக்கு ஆதரவாக கேரள மாநிலத்தில் போராட்டம் நடத்தியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, இந்த போராட்டத்தினால் கேரளாவில் நடிகர் விஜயின் மவுசும் கூடியுள்ளதாம்.

Related News

1090

இளமை துள்ளும் காதல் படைப்பாக உருவாகியுள்ள ‘சரீரம்’!
Monday September-15 2025

ஜி.வி.பி பிக்சர்ஸ் வழங்கும், இயக்குநர் ஜி...

பூஜையுடன் தொடங்கிய ‘காட்ஸ்ஜில்லா’ திரைப்பட படப்பிடிப்பு
Monday September-15 2025

சினிமா மீடியா அண்ட் என்டர்டெய்ன்மென்ட் லிமிடெட் - தினேஷ் ராஜ் வழங்கும், க்ரியேடிவ் என்டர்டெய்னர்ஸ் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் மற்றும் PGS புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் ‘காட்ஸ்ஜில்லா’...

மக்கள் என் கருத்துகளை ஏற்றுக்கொண்டனர் - இயக்குநர் பா.இரஞ்சித் பெருமிதம்
Sunday September-14 2025

லேர்ன் & டீச் புரொடக்‌ஷன்ஸ் ( Learn & Teach Production) சார்பில் எஸ்...

Recent Gallery