கடந்த 2009 ஆம் ஆண்டு விபச்சார வழக்கில் கைதாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கவர்ச்சி நடிகை பூனை கண் புவனேஸ்வரி, தற்போது இளம்பெண் கடத்தல் வழக்கில் சிக்கியுள்ளார்.
திருச்சியில் உறவினர் வீட்டில் தங்கியிருந்த இலங்கையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் கடந்த மாதம் 23-ந் தேதியன்று காணாமல் போனார். ஃபேஸ்புக் மூலம் ஏற்பட்ட நட்பால் மிதுன் என்பவருடன் அந்த இளம் பெண் காணாமல் போனதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், மாயமான அந்த பெண் விவகாரத்தில் நடிகை பூனை கண் புவனேஸ்வரிக்கு தொடர்பு இருப்பதாக அவரது தந்தை புகார் அளித்துள்ளார். இது குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளவர் அதில், “காணாமால் போன மகளை நடிகை புவனேஸ்வரி வீட்டில் அடைத்து வைத்திருக்கிறார். மகளுக்கு போதைப் பழக்கத்தை ஏற்படுத்திவிட்டார். அவரை மீட்டுத் தர வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் வாக்குமூலம் பெற்றதோடு, நடிகை புவனேஸ்வரியை நேரில் ஆஜராக உத்தரவிட்டனர். ஆனால், அவர் நீதிமன்றத்திற்கு வரவில்லை. இதையடுத்து புவனேஸ்வரிக்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்ததோடு, வரும் 30 ஆம் தேதி நீதிமன்றத்தில் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டனர்.
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...