Latest News :

விபச்சார வழக்கில் கைதான நடிகை புவனேஸ்வரி பெண் கடத்தல் வழக்கில் சிக்கினார்!
Wednesday October-25 2017

கடந்த 2009 ஆம் ஆண்டு விபச்சார வழக்கில் கைதாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கவர்ச்சி நடிகை பூனை கண் புவனேஸ்வரி, தற்போது இளம்பெண் கடத்தல் வழக்கில் சிக்கியுள்ளார்.

 

திருச்சியில் உறவினர் வீட்டில் தங்கியிருந்த இலங்கையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் கடந்த மாதம் 23-ந் தேதியன்று காணாமல் போனார். ஃபேஸ்புக் மூலம் ஏற்பட்ட நட்பால் மிதுன் என்பவருடன் அந்த இளம் பெண் காணாமல் போனதாக கூறப்படுகிறது.

 

இந்த நிலையில், மாயமான அந்த பெண் விவகாரத்தில் நடிகை பூனை கண் புவனேஸ்வரிக்கு தொடர்பு இருப்பதாக அவரது தந்தை புகார் அளித்துள்ளார். இது குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளவர் அதில், “காணாமால் போன மகளை நடிகை புவனேஸ்வரி வீட்டில் அடைத்து வைத்திருக்கிறார். மகளுக்கு போதைப் பழக்கத்தை ஏற்படுத்திவிட்டார். அவரை மீட்டுத் தர வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் வாக்குமூலம் பெற்றதோடு, நடிகை புவனேஸ்வரியை நேரில் ஆஜராக உத்தரவிட்டனர். ஆனால், அவர் நீதிமன்றத்திற்கு வரவில்லை. இதையடுத்து புவனேஸ்வரிக்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்ததோடு, வரும் 30 ஆம் தேதி நீதிமன்றத்தில் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டனர்.

Related News

1092

இளமை துள்ளும் காதல் படைப்பாக உருவாகியுள்ள ‘சரீரம்’!
Monday September-15 2025

ஜி.வி.பி பிக்சர்ஸ் வழங்கும், இயக்குநர் ஜி...

பூஜையுடன் தொடங்கிய ‘காட்ஸ்ஜில்லா’ திரைப்பட படப்பிடிப்பு
Monday September-15 2025

சினிமா மீடியா அண்ட் என்டர்டெய்ன்மென்ட் லிமிடெட் - தினேஷ் ராஜ் வழங்கும், க்ரியேடிவ் என்டர்டெய்னர்ஸ் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் மற்றும் PGS புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் ‘காட்ஸ்ஜில்லா’...

மக்கள் என் கருத்துகளை ஏற்றுக்கொண்டனர் - இயக்குநர் பா.இரஞ்சித் பெருமிதம்
Sunday September-14 2025

லேர்ன் & டீச் புரொடக்‌ஷன்ஸ் ( Learn & Teach Production) சார்பில் எஸ்...

Recent Gallery