Latest News :

நிலவேம்பு விவகாரம் - கமல் மீது வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு!
Wednesday October-25 2017

நிலவேம்பு விவகாரத்தில், முகாந்திரம் இருந்தால் நடிகர் கமல்ஹாசன் மீது வழக்கு பதிவு செய்யலாம், என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

நிலவேம்பு கசாயம் தொடர்பாக நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில் தகவல் வெளியிட்டு இருந்தார். அதில் சரியான ஆராய்ச்சி முடிவுகள் கிடைக்கும் வரை ரசிகர்கள் நிலவேம்பு வினியோகத்தில் ஈடுபட வேண்டாம் என்று கூறியிருந்தார்.

 

அவரது கருத்துக்கு சென்னை செம்பியத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் தேவராஜன் எதிர்ப்பு தெரிவித்தார். அவர் சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் கமல் மீது புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், தகவல் தொழில்நுட்பத்தின் மூலம் தவறான செயல்களை செய்து வரும் கமலை உடனடியாக கைது செய்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று தெரிவித்திருந்தார்.

 

இந்த வழக்கு குறித்த விசாரணை இன்று நீதிபதி முன்னால் எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் நிலவேம்பு கசாயம் தொடர்பாக கருத்து தெரிவித்த கமல்ஹாசன் கருத்தில் முகாந்திரம் இருந்தால் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கலாம் என்று உத்தரவிட்டுள்ளனர். 

 

மேலும் நிலவேம்பு குறித்த முடிவுகளை பெறப்பட்டு அதனை சமர்ப்பிக்கவும் உத்தரவிட்டுள்ளனர். 

Related News

1096

’கே.டி. - தி டெவில்’ அனைவருக்கும் பிடித்த மாஸ் ஆக்‌ஷன் படமாக இருக்கும் - துருவ் சர்ஜா நம்பிக்கை
Saturday July-12 2025

கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான  KVN Productions வெங்கட் கே...

நடிகைகளை உருட்டும் இயக்குநர் நான் அல்ல! - ’உருட்டு உருட்டு’ பட விழாவில் விக்ரமன் பேச்சு
Saturday July-12 2025

ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ்  என்ற பட நிறுவனம் சார்பில், சாய் காவியா சாய் கைலாஷ் வழங்க, பத்மராஜு  ஜெய்சங்கர் தயாரிப்பில்,   பாஸ்கர் சதாசிவம் இயக்கத்தில்,  சமூக அக்கறை மிக்க களத்தில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’உருட்டு உருட்டு’...

”’பீனிக்ஸ்’ நாயகன் சூர்யாவுக்கு மிகப்பெரிய எதிர்காலம் உள்ளது” - இயக்குநர் அனல் அரசு புகழாரம்
Saturday July-12 2025

இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...

Recent Gallery