‘மெர்சல்’ படத்திற்கு பிரச்சினை எழுந்த போது பலர் விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்தாலும், விஜய் மட்டும் மவுனமாகவே இருந்து வந்த நிலையில், நேற்று முதல் முறையாக தனது அறிக்கையை வெளியிட்டார்.
எச்.ராஜாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ‘ஜோசப் விஜய்’ என்ற பெயரிலேயே அறிக்கை வெளியிட்ட நடிகர் விஜய், அதில் தனக்கு ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், கோவையை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவர்கள் விஜய்க்கு புதிய சவால் ஒன்றை விட்டுள்ளனர். அந்த சவாலில் விஜய் தோற்றால் ரூ.1 கோடி தர வேண்டும், என்றும் கூறியுள்ளனர்.
‘மெர்சல்’ படத்தில் விஜய் சொல்வது போல சிங்கப்பூரில் இலவச மருத்துவம் வழங்கப்படுகிறது என்பதை நிரூபிக்க வேண்டும், அப்படி அவர் நிரூபிக்க தவறினால், ரூ.1 கோடி கொடுக்க தயாரா? என்று மாணவர்கள் சவால் விட்டுள்ளனர்.
மேலும், விஜய் தவறான தகவல்களை திரைப்படத்தில் கூறி மக்களை குழப்புவதோடு, கோயில் குள்ளே செருப்பு காளுடன் செல்வது, கோயில்கள் பற்றி தவறான கருத்துக்களை மக்களிடம் பறப்புவது, போன்ற குற்றங்களுக்காக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று வலியுறுத்தி போலீசில் புகாரும் அளித்துள்ளனர்.
கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான KVN Productions வெங்கட் கே...
ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில், சாய் காவியா சாய் கைலாஷ் வழங்க, பத்மராஜு ஜெய்சங்கர் தயாரிப்பில், பாஸ்கர் சதாசிவம் இயக்கத்தில், சமூக அக்கறை மிக்க களத்தில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’உருட்டு உருட்டு’...
இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...