‘மெர்சல்’ படத்திற்கு பிரச்சினை எழுந்த போது பலர் விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்தாலும், விஜய் மட்டும் மவுனமாகவே இருந்து வந்த நிலையில், நேற்று முதல் முறையாக தனது அறிக்கையை வெளியிட்டார்.
எச்.ராஜாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ‘ஜோசப் விஜய்’ என்ற பெயரிலேயே அறிக்கை வெளியிட்ட நடிகர் விஜய், அதில் தனக்கு ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், கோவையை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவர்கள் விஜய்க்கு புதிய சவால் ஒன்றை விட்டுள்ளனர். அந்த சவாலில் விஜய் தோற்றால் ரூ.1 கோடி தர வேண்டும், என்றும் கூறியுள்ளனர்.
‘மெர்சல்’ படத்தில் விஜய் சொல்வது போல சிங்கப்பூரில் இலவச மருத்துவம் வழங்கப்படுகிறது என்பதை நிரூபிக்க வேண்டும், அப்படி அவர் நிரூபிக்க தவறினால், ரூ.1 கோடி கொடுக்க தயாரா? என்று மாணவர்கள் சவால் விட்டுள்ளனர்.
மேலும், விஜய் தவறான தகவல்களை திரைப்படத்தில் கூறி மக்களை குழப்புவதோடு, கோயில் குள்ளே செருப்பு காளுடன் செல்வது, கோயில்கள் பற்றி தவறான கருத்துக்களை மக்களிடம் பறப்புவது, போன்ற குற்றங்களுக்காக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று வலியுறுத்தி போலீசில் புகாரும் அளித்துள்ளனர்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...