‘மெர்சல்’ படத்திற்கு பிரச்சினை எழுந்த போது பலர் விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்தாலும், விஜய் மட்டும் மவுனமாகவே இருந்து வந்த நிலையில், நேற்று முதல் முறையாக தனது அறிக்கையை வெளியிட்டார்.
எச்.ராஜாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ‘ஜோசப் விஜய்’ என்ற பெயரிலேயே அறிக்கை வெளியிட்ட நடிகர் விஜய், அதில் தனக்கு ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், கோவையை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவர்கள் விஜய்க்கு புதிய சவால் ஒன்றை விட்டுள்ளனர். அந்த சவாலில் விஜய் தோற்றால் ரூ.1 கோடி தர வேண்டும், என்றும் கூறியுள்ளனர்.
‘மெர்சல்’ படத்தில் விஜய் சொல்வது போல சிங்கப்பூரில் இலவச மருத்துவம் வழங்கப்படுகிறது என்பதை நிரூபிக்க வேண்டும், அப்படி அவர் நிரூபிக்க தவறினால், ரூ.1 கோடி கொடுக்க தயாரா? என்று மாணவர்கள் சவால் விட்டுள்ளனர்.
மேலும், விஜய் தவறான தகவல்களை திரைப்படத்தில் கூறி மக்களை குழப்புவதோடு, கோயில் குள்ளே செருப்பு காளுடன் செல்வது, கோயில்கள் பற்றி தவறான கருத்துக்களை மக்களிடம் பறப்புவது, போன்ற குற்றங்களுக்காக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று வலியுறுத்தி போலீசில் புகாரும் அளித்துள்ளனர்.
தமிழ் திரைப்படத் துறையின் சிறப்பையும், புதிய தலைமுறை திறமைகளையும் பாராட்டும் வகையில் தலை நிமிர் திரை விருதுகள் 2026 விழா, சென்னை பிரசாத் லேப் அரங்கில் சிறப்பாக நடைபெற்றது...
மலேசியாவில் கடந்த 27 ஆண்டுகளாகத் தனி முத்திரை பதித்து வரும் ‘நம்பிக்கை’ ஊடகம், இந்தியாவில் தனது புதிய கிளையைச் சென்னையில் கோலாகலமாகத் தொடங்கியது...
After more than a decade of reshaping Indian film music with award-winning background scores, chart-topping albums, and viral anthems, renowned composer and performer Anirudh Ravichander has announced the launch of Albuquerque Records, an artist-owned music label that marks a defining new chapter in his creative journey...