எங்கு பார்த்தாலும் ‘மெர்சல்’ பட சர்ச்சையும், விஜய்க்கு பலர் அளிக்கும் ஆதரவு குறித்தும் தான் செய்தியாக உள்ள நிலையில், விஜயை காட்டிலும் அரசியலுக்கு சிறந்தவர் நடிகர் அஜித் தான் என்று பிரபல இயக்குநர் சுசீந்திரன் கூறியுள்ளார்.
சுசீந்திரன் இயக்கத்தில் விரைவில் வெளியாக உள்ள ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படத்திற்கான புரொமோஷன் வேலைகள் படு ஜோராக நடந்துக்கொண்டிருக்கின்றன. இதற்காக படக்குழுவினர் ஊடகங்களுக்கு பேட்டியளித்து வருகின்றனர்.
இயக்குநர் சுசீந்திரன் பேட்டி அளிக்கையில், அவரிடம் மெர்சல் மற்றும் விஜய் - அஜித், அரசியல் குறித்து கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த சுசீந்திரன், “அரசியலை பொருத்தவரை விஜயை காட்டிலும் அஜித் தான் சிறப்பாக செயல்படுவார். எனவே, அவர் தான் அரசியலுக்கு வர வேண்டும்.
தற்போது சினிமாவில் விஜய், சிவகார்த்திகேயன் ஆகியோரது படங்கள் மட்டுமே தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்களுக்கு லாபம் ஈட்டி கொடுக்கிறது.” என்று தெரிவித்துள்ளார்.
விஜய் தலைவராக வந்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும், என்று அவரது தந்தை இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் தனது விருப்பத்தை வெளிப்படையாக தெரிவித்த நிலையில், இயக்குநர் சுசீந்திரனின் இத்தகைய பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ழகரம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில், நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஜித்து மாதவன் கூட்டணியில் உருவாகும் புதிய திரைப்படமான ‘சூர்யா 47’ படப்பிடிப்பு நேற்று சென்னையில் பூஜையுடன் தொடங்கியது...
இயக்குநர் வர்ஷா வாசுதேவ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'சின்ன சின்ன ஆசை' எனும் திரைப்படத்தில் நடிகை மதுபாலா மற்றும் நடிகர் இந்திரன்ஸ் ஆகியோர் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கிறார்கள்...
மும்பை, டிசம்பர் 2025: இந்த ஆண்டின் மிகப்பெரிய பான்-இந்தியா திரைப்பட கையகப்படுத்தல் ஒப்பந்தங்களில் ஒன்றான பனோரமா ஸ்டுடியோஸ், பென் ஸ்டுடியோஸுடன் இணைந்து ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்திருக்கும் மலையாளத் திரைப்படமான ’த்ரிஷ்யம் 3’ இன் உலகளாவிய திரையரங்கு மற்றும் டிஜிட்டல் உரிமைகளைப் பெற்றுள்ளது...