Latest News :

விஜய் தைரியம் இல்லாதவர் - திருமுருகன் காந்தி ஓபன் டாக்!
Thursday October-26 2017

விஜயின் ‘மெர்சல்’ படத்தில் பேசப்பட்டிருந்த ஜி.எஸ்.டி-க்கு எதிரான வசனங்களுக்கு தமிழக பா.ஜ.க தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அதுவே படத்திற்கு பெரிய விளம்பரமாக மாறி, வசூலில் மிகப்பெரிய சாதனையை நோக்கி படம் ஓடிக்கொண்டிருக்கிறது.

 

இந்த விவகாரத்தில் விஜய்க்கு பலர் ஆதரவு தெரிவித்தாலும், பிரச்சினை குறித்தோ அல்லது பா.ஜ.க எதிர்ப்பு குறித்தோ விஜய் எந்தவித கருத்தும் கூறாமல் அமைதி காந்து வருகிறார்.

 

இந்த நிலையில், ’மே 17’ இயக்கத்தை சேர்ந்த திருமுருகன் காந்தி, நடிகர் விஜய் தைரியம் இல்லாதவர், என்று கூறியிருக்கிறார்.

 

இது குறித்து பேட்டி ஒன்றில் கூறிய திருமுருகன் காந்தி, “விஜய் உண்மையாகவே ஜிஎஸ்டியால் மக்களுக்கு பாதிப்பு இருக்கின்றது என்று நினைத்திருந்தால், முதல் குரல் அவருடையதாக தான் இருக்க வேண்டும்.

 

ஒரு கலைஞனுக்கு உள்ள ஆளுமை என்பது அரசு அவர்களை அடக்கும் போது அதை மீறி, இது தான் உண்மை என்று சொல்ல வேண்டும்.

 

ஆனால், அப்படி ஒரு தைரியத்தை விஜய்யிடம் நான் பார்க்கவில்லை, அது மனதிற்கு வருத்தமாக உள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.

Related News

1105

‘தீயவர் குலை நடுங்க’ கதையை கேட்டு உடல் நடுங்கி விட்டது - ஐஸ்வர்யா ராஜேஷ்
Friday November-14 2025

அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...

’மிடில் கிளாஸ்’ பேசும் விசயம் முக்கியமானது - பிரபலங்கள் பாராட்டு
Wednesday November-12 2025

அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...

’யெல்லோ’ படம் மூலம் நிறைய கற்றுக்கொண்டோம் - பூர்ணிமா ரவி நெகிழ்ச்சி
Tuesday November-11 2025

யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...

Recent Gallery