Latest News :

விஜய் தைரியம் இல்லாதவர் - திருமுருகன் காந்தி ஓபன் டாக்!
Thursday October-26 2017

விஜயின் ‘மெர்சல்’ படத்தில் பேசப்பட்டிருந்த ஜி.எஸ்.டி-க்கு எதிரான வசனங்களுக்கு தமிழக பா.ஜ.க தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அதுவே படத்திற்கு பெரிய விளம்பரமாக மாறி, வசூலில் மிகப்பெரிய சாதனையை நோக்கி படம் ஓடிக்கொண்டிருக்கிறது.

 

இந்த விவகாரத்தில் விஜய்க்கு பலர் ஆதரவு தெரிவித்தாலும், பிரச்சினை குறித்தோ அல்லது பா.ஜ.க எதிர்ப்பு குறித்தோ விஜய் எந்தவித கருத்தும் கூறாமல் அமைதி காந்து வருகிறார்.

 

இந்த நிலையில், ’மே 17’ இயக்கத்தை சேர்ந்த திருமுருகன் காந்தி, நடிகர் விஜய் தைரியம் இல்லாதவர், என்று கூறியிருக்கிறார்.

 

இது குறித்து பேட்டி ஒன்றில் கூறிய திருமுருகன் காந்தி, “விஜய் உண்மையாகவே ஜிஎஸ்டியால் மக்களுக்கு பாதிப்பு இருக்கின்றது என்று நினைத்திருந்தால், முதல் குரல் அவருடையதாக தான் இருக்க வேண்டும்.

 

ஒரு கலைஞனுக்கு உள்ள ஆளுமை என்பது அரசு அவர்களை அடக்கும் போது அதை மீறி, இது தான் உண்மை என்று சொல்ல வேண்டும்.

 

ஆனால், அப்படி ஒரு தைரியத்தை விஜய்யிடம் நான் பார்க்கவில்லை, அது மனதிற்கு வருத்தமாக உள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.

Related News

1105

இளமை துள்ளும் காதல் படைப்பாக உருவாகியுள்ள ‘சரீரம்’!
Monday September-15 2025

ஜி.வி.பி பிக்சர்ஸ் வழங்கும், இயக்குநர் ஜி...

பூஜையுடன் தொடங்கிய ‘காட்ஸ்ஜில்லா’ திரைப்பட படப்பிடிப்பு
Monday September-15 2025

சினிமா மீடியா அண்ட் என்டர்டெய்ன்மென்ட் லிமிடெட் - தினேஷ் ராஜ் வழங்கும், க்ரியேடிவ் என்டர்டெய்னர்ஸ் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் மற்றும் PGS புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் ‘காட்ஸ்ஜில்லா’...

மக்கள் என் கருத்துகளை ஏற்றுக்கொண்டனர் - இயக்குநர் பா.இரஞ்சித் பெருமிதம்
Sunday September-14 2025

லேர்ன் & டீச் புரொடக்‌ஷன்ஸ் ( Learn & Teach Production) சார்பில் எஸ்...

Recent Gallery