விஜயின் ‘மெர்சல்’ படத்தில் பேசப்பட்டிருந்த ஜி.எஸ்.டி-க்கு எதிரான வசனங்களுக்கு தமிழக பா.ஜ.க தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அதுவே படத்திற்கு பெரிய விளம்பரமாக மாறி, வசூலில் மிகப்பெரிய சாதனையை நோக்கி படம் ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த விவகாரத்தில் விஜய்க்கு பலர் ஆதரவு தெரிவித்தாலும், பிரச்சினை குறித்தோ அல்லது பா.ஜ.க எதிர்ப்பு குறித்தோ விஜய் எந்தவித கருத்தும் கூறாமல் அமைதி காந்து வருகிறார்.
இந்த நிலையில், ’மே 17’ இயக்கத்தை சேர்ந்த திருமுருகன் காந்தி, நடிகர் விஜய் தைரியம் இல்லாதவர், என்று கூறியிருக்கிறார்.
இது குறித்து பேட்டி ஒன்றில் கூறிய திருமுருகன் காந்தி, “விஜய் உண்மையாகவே ஜிஎஸ்டியால் மக்களுக்கு பாதிப்பு இருக்கின்றது என்று நினைத்திருந்தால், முதல் குரல் அவருடையதாக தான் இருக்க வேண்டும்.
ஒரு கலைஞனுக்கு உள்ள ஆளுமை என்பது அரசு அவர்களை அடக்கும் போது அதை மீறி, இது தான் உண்மை என்று சொல்ல வேண்டும்.
ஆனால், அப்படி ஒரு தைரியத்தை விஜய்யிடம் நான் பார்க்கவில்லை, அது மனதிற்கு வருத்தமாக உள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.
பிரபல நிறுவனமான Behindwoods Productions தயாரிக்கும் ‘மூன்வாக்’ (Moonwalk) திரைப்படத்தின் 14 கேரக்டர் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது...
யாஷ் நடிக்கும் மிகப்பிரம்மாண்ட படைப்பான ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’, மார்ச் 19, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படக்குழு அதன் இருண்ட மர்மமான உலகத்தின் இன்னொரு முக்கிய அத்தியாயத்தை ரசிகர்களுக்கு வெளிப்படுத்தியுள்ளது...
இயக்குநர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவரும், அவரது உறவினருமான மதிமாறன் புகழேந்தி ’செல்ஃபி’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார்...