பல சாதனைகளையும், சோதனைகளையும் சந்தித்து வந்த ‘மெர்சல்’ தற்போது ரூ.200 கோடியை வசூலிக்கப் போவதாக கூறப்படுவதோடு, படம் இந்தியா முழுவதும் ஹிட் ஆகியுள்ளது. இதனை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், விஜய் ரசிகர் மன்ற தலைவருக்கு நேர்ந்த கொடூரத்தால், ஒட்டு மொத்த விஜய் ரசிகர்களே பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
கேரளாவில், நேற்று (அக்.25) திருவனந்தபுரம் விஜய் ரசிகர் மன்ற தலைவர் லவ்டுடே ஸ்ரீநாத், இரவு கட்-அவுட்கள் வைத்துவிட்டு வீடு திரும்பும் போது பேருந்து மோதி மரணம் அடைந்துள்ளார்.
விஜயின் தீவிர ரசிகரான இவர், விஜய் வெறியராக வலம் வந்தவர் ஆவார். இவரை மையமாக வைத்து தான், ‘போக்கிரி சைமன்’ என்ற மலையால திரைப்படத்தை எடுத்தார்கள்.
அப்படிப்பட்ட ஒரு ரசிகர், இப்படி கொடூரமாக உயிரிழந்த சம்பவத்தால் கேரளா விஜய் ரசிகர்கள் மட்டும் இன்றி, ஒட்டு மொத்த விஜய் ரசிகர்களும் சோகத்தில் மூழ்கியிருக்கிறார்கள்.
கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான KVN Productions வெங்கட் கே...
ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில், சாய் காவியா சாய் கைலாஷ் வழங்க, பத்மராஜு ஜெய்சங்கர் தயாரிப்பில், பாஸ்கர் சதாசிவம் இயக்கத்தில், சமூக அக்கறை மிக்க களத்தில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’உருட்டு உருட்டு’...
இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...