விஜயின் ‘மெர்சல்’ படம் ரிலிஸிக்கு முன்பாகவும், ரிலிஸிக்கு பிறகும் பல பிரச்சினைகளை சந்தித்து வந்தாலும், மிகப்பெரிய வசூலோடு ஓடிக்கொண்டிருக்கிறது. படத்திற்கு எதிராக குரல் கொடுத்தவர்கள் அனைவரும் அமைதியாகும்படி பொதுமக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள், திரையுலக பிரமுகர்கள் என பலர் ஆதரவு குரல் எழுப்பினார்கள்.
இந்த நிலையில், இன்று (அக்.27) வெளியாக இருந்த ‘மெர்சல்’ படத்தின் தெலுங்கு டப்பிங்கான ‘அதிரிந்தி’ படத்திற்கு பிரச்சினை எழுந்துள்ளது.
படத்தில் இடம்பெற்றிருந்த ஜி.எஸ்.டி மற்றும் டிஜிட்டல் மணி குறித்த வசனங்களுக்கு தமிழக பா.ஜ.க எதிர்ப்பு தெரிவித்தாலும், அக்காட்சிகள் படத்தில் இருந்து நீக்கப்படவில்லை. அதே சமயம் தெலுங்கு மெர்சலில் அந்த காட்சிகள் அனைத்தும் நீக்கப்பட்டுவிட்டதாம்.
படத்திற்கு முக்கியமான காட்சியாகவும், மக்களிடம் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய காட்சியாகவும் அமைந்த அந்த காட்சிகளை படத்தில் மீண்டும் சேர்க்க, தெலுங்கில் மெர்சல் படத்தை வெளியிடுபவர் போராடி வருகிறார்களாம். இதற்காக இன்று வெளியாக இருந்த ‘அதிரிந்தி’ வெளியிடப்படவில்லை என்றும், வெளியீட்டு தேதி பிறகு அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...