விஜயின் ‘மெர்சல்’ படம் ரிலிஸிக்கு முன்பாகவும், ரிலிஸிக்கு பிறகும் பல பிரச்சினைகளை சந்தித்து வந்தாலும், மிகப்பெரிய வசூலோடு ஓடிக்கொண்டிருக்கிறது. படத்திற்கு எதிராக குரல் கொடுத்தவர்கள் அனைவரும் அமைதியாகும்படி பொதுமக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள், திரையுலக பிரமுகர்கள் என பலர் ஆதரவு குரல் எழுப்பினார்கள்.
இந்த நிலையில், இன்று (அக்.27) வெளியாக இருந்த ‘மெர்சல்’ படத்தின் தெலுங்கு டப்பிங்கான ‘அதிரிந்தி’ படத்திற்கு பிரச்சினை எழுந்துள்ளது.
படத்தில் இடம்பெற்றிருந்த ஜி.எஸ்.டி மற்றும் டிஜிட்டல் மணி குறித்த வசனங்களுக்கு தமிழக பா.ஜ.க எதிர்ப்பு தெரிவித்தாலும், அக்காட்சிகள் படத்தில் இருந்து நீக்கப்படவில்லை. அதே சமயம் தெலுங்கு மெர்சலில் அந்த காட்சிகள் அனைத்தும் நீக்கப்பட்டுவிட்டதாம்.
படத்திற்கு முக்கியமான காட்சியாகவும், மக்களிடம் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய காட்சியாகவும் அமைந்த அந்த காட்சிகளை படத்தில் மீண்டும் சேர்க்க, தெலுங்கில் மெர்சல் படத்தை வெளியிடுபவர் போராடி வருகிறார்களாம். இதற்காக இன்று வெளியாக இருந்த ‘அதிரிந்தி’ வெளியிடப்படவில்லை என்றும், வெளியீட்டு தேதி பிறகு அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இயக்குநர் நிதிஷ் சகாதேவ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'தலைவர் தம்பி தலைமையில்' படத்தில் ஜீவா, தம்பி ராமையா, இளவரசு, பிரார்த்தனா நாதன், ஜெய்வந்த், ஜென்சன் திவாகர், மணிமேகலை, சர்ஜின் குமார், ராஜேஷ் பாண்டியன், சுபாஷ் கண்ணன், அமித் மோகன், அனு ராஜ், சரத் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்...
தமிழ் திரையுலகில் முன்னணி வசூல் நாயகனாக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன், பல்வேறு ஜானர்களில் தனது அபாரமான நடிப்புத் திறனை நிரூபித்துள்ளார்...
விஜய் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் வெளியாகாது, என்று தயாரிப்பு தரப்பு நேற்று இரவு அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது...