தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளரான ஆரவ், விரைவில் தமிழ் சினிமாவின் ஹீரோ பட்டியலில் இடம்பெறப் போவது அனைவரும் அறிந்ததே. அறியாத ஒன்று, பிக் பாஸ் நிகழ்ச்சியின் போது ஓவியாவின் காதலை நிராகரித்த ஆரவ், தற்போது ஓவியாவை வலைக்க முயற்சித்து வருகிறாராம்.
ஆனால், இதற்கு பின்னாடி ஆரவி பெரிய சுயநலம் இருப்பதாக கோலிவுட்டில் கூறப்படுகிறது. அதாவது ஆரவை ஹீரோவாக அறிமுகப்படுத்த உள்ள இயக்குநர் சரவணன், ஆரவுக்கு ஜோடியாக ஓவியாவை நடிக்க வைத்தால் படத்திற்கு கூடுதல் எதிர்ப்பார்ப்பு கிடைக்கும் என்ற கணக்கு போட்டு, ஆரவுக்கு ஓவியாவை ஜோடிக்க முடிவு செய்தாராம். இதை ஆரவுடன் கூறியதுடன், ஓவியாவின் கால்ஷீடை எப்படியாவது வாங்கிவிடும்படியும் ஆரவுக்கு கட்டளையிட்டுள்ளார். கூடவே, இது எல்லாம் உங்களது பியூச்சருக்காக தான், என்று சாவியும் கொடுத்தாராம்.
இதன் காரணமாக, ஓவியாவுடன் மீண்டும் நட்பு பழக ஆரம்பித்துள்ள ஆரவ், தனது படத்தில் ஹீரோயினாக நடிக்கும்படி ஓவியாவிடம் கேட்க, அதற்கு ஓவியாவோ ரூ.1 கோடி சம்பளம் கொடுத்தால் நடிப்பதாக கூறியுள்ளார். ஆனால், தயாரிப்பு தரப்பு கோடி எல்லாம் முடியாது, சில லட்சங்கள் மட்டுமே கொடுக்க முடியும், என்று சொல்லிவிட்டதால், தற்போது ஆரவுக்கு புது ஜோடி தேடி வருகிறார்களாம்.
இருந்தாலும், தனது முயற்சியை கைவிடாத ஆரவு, எப்படியாவது ஓவியாவை வலைத்துவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறாராம்.
ஒரு நேரத்துல ஓவிய ஆரவை வலைக்கப் பார்க்க, இப்போ ஆரவ் ஓவியாவை வலைக்கப் பார்க்கிறார், என்ன கொடுமை மக்களே இது!
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...