தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளரான ஆரவ், விரைவில் தமிழ் சினிமாவின் ஹீரோ பட்டியலில் இடம்பெறப் போவது அனைவரும் அறிந்ததே. அறியாத ஒன்று, பிக் பாஸ் நிகழ்ச்சியின் போது ஓவியாவின் காதலை நிராகரித்த ஆரவ், தற்போது ஓவியாவை வலைக்க முயற்சித்து வருகிறாராம்.
ஆனால், இதற்கு பின்னாடி ஆரவி பெரிய சுயநலம் இருப்பதாக கோலிவுட்டில் கூறப்படுகிறது. அதாவது ஆரவை ஹீரோவாக அறிமுகப்படுத்த உள்ள இயக்குநர் சரவணன், ஆரவுக்கு ஜோடியாக ஓவியாவை நடிக்க வைத்தால் படத்திற்கு கூடுதல் எதிர்ப்பார்ப்பு கிடைக்கும் என்ற கணக்கு போட்டு, ஆரவுக்கு ஓவியாவை ஜோடிக்க முடிவு செய்தாராம். இதை ஆரவுடன் கூறியதுடன், ஓவியாவின் கால்ஷீடை எப்படியாவது வாங்கிவிடும்படியும் ஆரவுக்கு கட்டளையிட்டுள்ளார். கூடவே, இது எல்லாம் உங்களது பியூச்சருக்காக தான், என்று சாவியும் கொடுத்தாராம்.
இதன் காரணமாக, ஓவியாவுடன் மீண்டும் நட்பு பழக ஆரம்பித்துள்ள ஆரவ், தனது படத்தில் ஹீரோயினாக நடிக்கும்படி ஓவியாவிடம் கேட்க, அதற்கு ஓவியாவோ ரூ.1 கோடி சம்பளம் கொடுத்தால் நடிப்பதாக கூறியுள்ளார். ஆனால், தயாரிப்பு தரப்பு கோடி எல்லாம் முடியாது, சில லட்சங்கள் மட்டுமே கொடுக்க முடியும், என்று சொல்லிவிட்டதால், தற்போது ஆரவுக்கு புது ஜோடி தேடி வருகிறார்களாம்.
இருந்தாலும், தனது முயற்சியை கைவிடாத ஆரவு, எப்படியாவது ஓவியாவை வலைத்துவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறாராம்.
ஒரு நேரத்துல ஓவிய ஆரவை வலைக்கப் பார்க்க, இப்போ ஆரவ் ஓவியாவை வலைக்கப் பார்க்கிறார், என்ன கொடுமை மக்களே இது!
எம். ஜி. ஆர். சிவாஜி அகாடமி என்ற தலைப்பில் பிரபல மக்கள் தொடர்பாளர் டைமண்ட் பாபு, ஆண்டு தோறும் சிறந்த பட தயாரிப்பாளர், சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த கதாநாயகன், கதாநாயகி மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு விருது வழங்கி கெளரவித்து வருகிறார்...
இயக்குநர் நிதிஷ் சகாதேவ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'தலைவர் தம்பி தலைமையில்' படத்தில் ஜீவா, தம்பி ராமையா, இளவரசு, பிரார்த்தனா நாதன், ஜெய்வந்த், ஜென்சன் திவாகர், மணிமேகலை, சர்ஜின் குமார், ராஜேஷ் பாண்டியன், சுபாஷ் கண்ணன், அமித் மோகன், அனு ராஜ், சரத் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்...
தமிழ் திரையுலகில் முன்னணி வசூல் நாயகனாக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன், பல்வேறு ஜானர்களில் தனது அபாரமான நடிப்புத் திறனை நிரூபித்துள்ளார்...