விஜயின் ‘மெர்சல்’ படத்திற்கு எதிராக குரல் கொடுத்த தமிழக பா.ஜ.க தலைவர் டாக்டர்.தமிழிசை சவுந்தரராஜன் அடித்த திடீர் பல்டியால், அவருக்கு விஜய் தம்பியாகிவிட்டார்.
மெர்சல் படத்தில் பேசப்பட்ட ஜி.எஸ்.டி மற்றும் டிஜிட்டல் மணி தொடர்பான வசனங்களுக்கு கண்டனம் தெரிவித்த தமிழிசை சவுந்தரராஜன், விஜய் குறித்து மீடியாக்களிடம் தாறுமாறாக பேசியதோடு, மிரட்டலும் விடுத்தார். இருப்பினும், அவரது எதிர்ப்பு மெர்சல் படத்திற்கு ஆதரவாக அமைந்து படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு, அமோக வசூலையும் பெற்று வருகிறது.
இந்த நிலையில், தம்பி விஜய்க்கு எதிராக நான் கருத்து கூறவில்லை, என்று தமிழிசை அப்படியே அந்தர்பல்டி அடித்துள்ளார்.
இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மெர்சல் படத்தில் உள்ள தவறான கருத்துகளை மட்டுமே எதிர்த்தோம். தம்பி விஜய்க்கு எதிராக எந்த கருத்தையும் கூறவில்லை, என்று தெரிவித்தார்.
தமிழிசை சவுந்தரராஜனின் இந்த அந்தர் பல்டி அரசியல் பா.ஜ.க தொண்டர்களை மட்டும் இன்றி, விஜய் ரசிகர்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
எம். ஜி. ஆர். சிவாஜி அகாடமி என்ற தலைப்பில் பிரபல மக்கள் தொடர்பாளர் டைமண்ட் பாபு, ஆண்டு தோறும் சிறந்த பட தயாரிப்பாளர், சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த கதாநாயகன், கதாநாயகி மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு விருது வழங்கி கெளரவித்து வருகிறார்...
இயக்குநர் நிதிஷ் சகாதேவ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'தலைவர் தம்பி தலைமையில்' படத்தில் ஜீவா, தம்பி ராமையா, இளவரசு, பிரார்த்தனா நாதன், ஜெய்வந்த், ஜென்சன் திவாகர், மணிமேகலை, சர்ஜின் குமார், ராஜேஷ் பாண்டியன், சுபாஷ் கண்ணன், அமித் மோகன், அனு ராஜ், சரத் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்...
தமிழ் திரையுலகில் முன்னணி வசூல் நாயகனாக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன், பல்வேறு ஜானர்களில் தனது அபாரமான நடிப்புத் திறனை நிரூபித்துள்ளார்...