விவேகம் படத்துடன் மெர்சல் படத்தை ஒப்பிட்டு சந்தோஷப்பட்டுக் கொண்ட விஜய் ரசிகர்கள் தற்போது அவமானப்படும் விதத்தில், அஜித் ரசிகர்கள் மெர்சல் படத்தை கிண்டல் செய்வதற்கான காரணம் ஒன்று கிடைத்துவிட்டது. சும்மாவே சுரண்டும் அஜித் ரசிகர்கள், அல்வா கிடைத்தால் சும்மா விட்டுடுவார்களா?
மெர்சல் படத்திற்கு அளிக்கப்பட்ட சென்சார் சான்றிதழை திரும்ப பெற வேண்டும், என்று கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கில் எந்தவித முகாந்திரமும் இல்லை, கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர்.
மேலும், மெர்சல் படம் குறித்து கருத்து கூறிய நீதிபதிகள், ‘மெர்சல்’ நல்ல படம் என்று சொல்லும் அளவிற்கு இல்லை. எனினும் இதுபோன்ற விமர்சங்களால் படம் நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தியாவில் எத்தனையோ பிரச்சினை இருக்கும் போது ஒரு திரைப்படத்தை எதிர்த்து வழக்கு போடுவது சரியா? திரைப்படத்தை திரைப்படமாக மட்டும் பாருங்கள், என்று கூறியுள்ளனர்.
‘மெர்சல்’ நல்ல படம் இல்லை, என்று நீதிபதிகளே கூறியதை குறிப்பிட்டு மீம்ஸ்கள் கிரியேட் பண்ணி சமூக வலைதளங்களில் வெளியிடும் அஜித் ரசிகர்கள், விஜய் ரசிகர்களையும் விஜையும் ஓட்டு...ஓட்டு என்று ஓட்டி வருகிறார்கள்.
அஜித் ரசிகர்களின் இத்தகைய கிண்டலால் விஜய் ரசிகர்கல் பதிலளிக்க முடியாமல் அவமானப்பட்டு வருகிறார்கள்.
எம். ஜி. ஆர். சிவாஜி அகாடமி என்ற தலைப்பில் பிரபல மக்கள் தொடர்பாளர் டைமண்ட் பாபு, ஆண்டு தோறும் சிறந்த பட தயாரிப்பாளர், சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த கதாநாயகன், கதாநாயகி மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு விருது வழங்கி கெளரவித்து வருகிறார்...
இயக்குநர் நிதிஷ் சகாதேவ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'தலைவர் தம்பி தலைமையில்' படத்தில் ஜீவா, தம்பி ராமையா, இளவரசு, பிரார்த்தனா நாதன், ஜெய்வந்த், ஜென்சன் திவாகர், மணிமேகலை, சர்ஜின் குமார், ராஜேஷ் பாண்டியன், சுபாஷ் கண்ணன், அமித் மோகன், அனு ராஜ், சரத் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்...
தமிழ் திரையுலகில் முன்னணி வசூல் நாயகனாக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன், பல்வேறு ஜானர்களில் தனது அபாரமான நடிப்புத் திறனை நிரூபித்துள்ளார்...