Latest News :

மீடியா உலகை விட்டு விலகியது ஏன்? - பெப்ஸி உமா கூறும் பகீர் காரணம்!
Saturday October-28 2017

நிகழ்ச்சி தொகுப்பாளர் என்றாலே முதலில் நம் நினைவுக்கு வருவது பெப்ஸி உமா தான். இவரைப் போல ஒரு தொகுப்பாளினியை நாம் பார்த்திருக்கவும் முடியாது, நிகழ்ச்சி தொகுப்பில் இவரைப் போல யாரும் உற்சத்தை தொட்டிருக்கவும் முடியாது. அந்த அளவுக்கு மீடியா உலகில் பேரோடும், புகழோடும் வலம் வந்தார்.

 

அதுமட்டும் அல்ல நடிகைகளுக்கு கோயில் கட்டியது கேள்வி பட்டிருக்கிறோம். பெப்ஸி உமாவுக்கு பல ரசிகர்கள் கோயில் கட்டியிருக்கிறார்கள். ஆந்திராவில் உள்ள குமளி என்ற இடத்தில் தற்போது இவருக்கு கட்டிய கோயில் இருப்பதாக கூறப்படுகிறது.

 

மேலும், உடையில் வந்த பிரச்சினை காரணமாக சச்சினுடன் இணைந்து பெப்ஸி விளம்பரத்தில் நடிக்க கூடிய வாய்ப்பை நிராகரித்த பெப்ஸி உமா, ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பையும், மணிரத்னம் மற்றும் பாலிவுட் இயக்குநர் சுபாஷ் காயின் இயக்கத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை கூட நிராகரித்தாராம்.

 

அந்த அளவுக்கு புகழின் உற்சத்தில் இருந்த இவர், திடீரென்று மீடியா உலகைவிட்டு மறைந்துவிட்டார். அதற்கான காரணம் என்ன என்று பழைய பேட்டி ஒன்றில், “அரசியல் ரீதியான தொந்தரவு, அழுத்தம் காரணமாகவே மீடியா உலகை விட்டு விலகினேன்.” என்று பெப்ஸி உமா கூறியுள்ளார்.

 

தூர்தர்ஷனில் தனது மீடியா வாழ்க்கையை தொடங்கிய பெப்ஸி உமா, அதன் பிறகு தனியார் தொலைக்காட்சி ஒன்றில் 10 வருடங்களுக்கு மேலாக பணியாற்றியதோடு, அதே தொலைக்காட்சியில் சொந்தமாக சில நிகழ்ச்சிகளையும் தயாரித்தார். 

Related News

1135

சினிமாவில் வெற்றி பெற 4 விசயங்கள் அவசியம்! - இயக்குநர் எஸ்.பி.முத்துராமன்
Thursday November-06 2025

பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...

’ஆர்யன்’ பட கிளைமாக்ஸ் மாற்றம்! - வெற்றி விழாவில் படக்குழு தகவல்
Wednesday November-05 2025

அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...

”விஜய் முதலமைச்சரானால் நல்லதுதான்” - மனம் திறந்த பி.டி.செல்வகுமார்
Tuesday November-04 2025

பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...

Recent Gallery