நிகழ்ச்சி தொகுப்பாளர் என்றாலே முதலில் நம் நினைவுக்கு வருவது பெப்ஸி உமா தான். இவரைப் போல ஒரு தொகுப்பாளினியை நாம் பார்த்திருக்கவும் முடியாது, நிகழ்ச்சி தொகுப்பில் இவரைப் போல யாரும் உற்சத்தை தொட்டிருக்கவும் முடியாது. அந்த அளவுக்கு மீடியா உலகில் பேரோடும், புகழோடும் வலம் வந்தார்.
அதுமட்டும் அல்ல நடிகைகளுக்கு கோயில் கட்டியது கேள்வி பட்டிருக்கிறோம். பெப்ஸி உமாவுக்கு பல ரசிகர்கள் கோயில் கட்டியிருக்கிறார்கள். ஆந்திராவில் உள்ள குமளி என்ற இடத்தில் தற்போது இவருக்கு கட்டிய கோயில் இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும், உடையில் வந்த பிரச்சினை காரணமாக சச்சினுடன் இணைந்து பெப்ஸி விளம்பரத்தில் நடிக்க கூடிய வாய்ப்பை நிராகரித்த பெப்ஸி உமா, ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பையும், மணிரத்னம் மற்றும் பாலிவுட் இயக்குநர் சுபாஷ் காயின் இயக்கத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை கூட நிராகரித்தாராம்.
அந்த அளவுக்கு புகழின் உற்சத்தில் இருந்த இவர், திடீரென்று மீடியா உலகைவிட்டு மறைந்துவிட்டார். அதற்கான காரணம் என்ன என்று பழைய பேட்டி ஒன்றில், “அரசியல் ரீதியான தொந்தரவு, அழுத்தம் காரணமாகவே மீடியா உலகை விட்டு விலகினேன்.” என்று பெப்ஸி உமா கூறியுள்ளார்.
தூர்தர்ஷனில் தனது மீடியா வாழ்க்கையை தொடங்கிய பெப்ஸி உமா, அதன் பிறகு தனியார் தொலைக்காட்சி ஒன்றில் 10 வருடங்களுக்கு மேலாக பணியாற்றியதோடு, அதே தொலைக்காட்சியில் சொந்தமாக சில நிகழ்ச்சிகளையும் தயாரித்தார்.
எம். ஜி. ஆர். சிவாஜி அகாடமி என்ற தலைப்பில் பிரபல மக்கள் தொடர்பாளர் டைமண்ட் பாபு, ஆண்டு தோறும் சிறந்த பட தயாரிப்பாளர், சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த கதாநாயகன், கதாநாயகி மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு விருது வழங்கி கெளரவித்து வருகிறார்...
இயக்குநர் நிதிஷ் சகாதேவ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'தலைவர் தம்பி தலைமையில்' படத்தில் ஜீவா, தம்பி ராமையா, இளவரசு, பிரார்த்தனா நாதன், ஜெய்வந்த், ஜென்சன் திவாகர், மணிமேகலை, சர்ஜின் குமார், ராஜேஷ் பாண்டியன், சுபாஷ் கண்ணன், அமித் மோகன், அனு ராஜ், சரத் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்...
தமிழ் திரையுலகில் முன்னணி வசூல் நாயகனாக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன், பல்வேறு ஜானர்களில் தனது அபாரமான நடிப்புத் திறனை நிரூபித்துள்ளார்...