படம் ரிலிஸுக்கு முன்பாக பல சாதனைகளை நிகழ்த்திய விஜயின் ‘மெர்சல்’ ரிலிஸிற்கு பிறகு மிகப்பெரிய சோதனையை சந்தித்தாலும், அதுவும் படத்திற்கு சாதகமாக முடிந்ததால், விஜய், தயாரிப்பாளர் உள்ளிட்ட ஒட்டு மொத்த ‘மெர்சல்’ குழு ஹாப்பியாக உள்ள நிலையில், மேலும் அவர்களை ஹாப்பியாக்கும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது, மெர்சல் படத்தின் பாடல்கள் ஆன்லைன் ஸ்ட்ரீமிங்கில் புதிய சாதனை படைத்திருக்கிறதாம். தமிழ்ப் படங்களில் அதிவேகமாக 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்த முதல் திரைப்படம் என்ற சாதனையை ‘மெர்சல்’ பெற்றுள்ளது.
இது குறித்து சோனி மியூசிக் நிறுவனத்திடம் விசாரித்தததுற்கு, தமிழகத்தில் மட்டும் அல்ல, தென்னிந்திய திரைப்படங்களிலேயே ஆன்லைன் ஸ்டீமிங்கில் ஒரு திரைப்படத்தின் பாடல்கள் 100 மில்லியன் ரசிகர்களை கடந்தது என்றால், அது மெர்சல் தான் என்கிறார்கள்.
விஜயின் ‘மெர்சல்’ நிகழ்த்தியிருக்கும் இந்த புது சாதனையால் விஜய் ரசிகர்கல் செம ஹாப்பியாம்.
எம். ஜி. ஆர். சிவாஜி அகாடமி என்ற தலைப்பில் பிரபல மக்கள் தொடர்பாளர் டைமண்ட் பாபு, ஆண்டு தோறும் சிறந்த பட தயாரிப்பாளர், சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த கதாநாயகன், கதாநாயகி மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு விருது வழங்கி கெளரவித்து வருகிறார்...
இயக்குநர் நிதிஷ் சகாதேவ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'தலைவர் தம்பி தலைமையில்' படத்தில் ஜீவா, தம்பி ராமையா, இளவரசு, பிரார்த்தனா நாதன், ஜெய்வந்த், ஜென்சன் திவாகர், மணிமேகலை, சர்ஜின் குமார், ராஜேஷ் பாண்டியன், சுபாஷ் கண்ணன், அமித் மோகன், அனு ராஜ், சரத் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்...
தமிழ் திரையுலகில் முன்னணி வசூல் நாயகனாக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன், பல்வேறு ஜானர்களில் தனது அபாரமான நடிப்புத் திறனை நிரூபித்துள்ளார்...