ராதிகா சரத்குமார் தயாரிக்கும் ‘தாமரை’ தொலைக்காட்சியில் நடிக்கும் நடிகை ஒருவர், தன் மீது ஆசிட் வீசிவிடுவதாக மிரட்டல் வந்துள்ளதாக சென்னை போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
தாமரை உள்ளிட்ட பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருபவர் நடிகை ஆனந்து. இவர் உறவினரிடம் வாங்கிய ரூ.5 லட்சம் கடனுக்கு, வட்டியாக ரூ.1.80 செலுத்துவிட்டாராம். ஆனால் இவர் கொடுத்த காலி வங்கி காசோலையை பயன்படுத்தி அவருக்கு கடன் கொடுத்தவர்கள் வீட்டை எழுதி கேட்டு மிரட்டுகிறார்களாம்.
இந்த பிரச்சினையில் தனது சகோதரரையும் கொலை செய்துவிட்டு, விபத்து என நாடகமாடி வருகின்றனர், என்று தெரிவித்துள்ளவர், தனது சகோதரரின் மரணத்தில் சந்தேகம் உள்ளது, என புகார் அளித்தும் போலீஸ் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை, என்று தெரிவித்துள்ளார்.
மேலும், ஆனந்தியை கொலை செய்துவிடுவதாக மிரட்டுபவர்கள், அவர் மீது ஆசிட் வீசுவோம், என்றும் தொடர்ந்து மிரட்டி வருகிறார்களாம்.
இது பற்றி சென்னை போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ள நடிகை ஆனந்தி, முதல்வர் தனிப்பிரிவிற்கும் புகார் மனு கொடுத்துள்ளாராம்.
இயக்குநர் நிதிஷ் சகாதேவ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'தலைவர் தம்பி தலைமையில்' படத்தில் ஜீவா, தம்பி ராமையா, இளவரசு, பிரார்த்தனா நாதன், ஜெய்வந்த், ஜென்சன் திவாகர், மணிமேகலை, சர்ஜின் குமார், ராஜேஷ் பாண்டியன், சுபாஷ் கண்ணன், அமித் மோகன், அனு ராஜ், சரத் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்...
தமிழ் திரையுலகில் முன்னணி வசூல் நாயகனாக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன், பல்வேறு ஜானர்களில் தனது அபாரமான நடிப்புத் திறனை நிரூபித்துள்ளார்...
விஜய் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் வெளியாகாது, என்று தயாரிப்பு தரப்பு நேற்று இரவு அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது...