ராதிகா சரத்குமார் தயாரிக்கும் ‘தாமரை’ தொலைக்காட்சியில் நடிக்கும் நடிகை ஒருவர், தன் மீது ஆசிட் வீசிவிடுவதாக மிரட்டல் வந்துள்ளதாக சென்னை போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
தாமரை உள்ளிட்ட பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருபவர் நடிகை ஆனந்து. இவர் உறவினரிடம் வாங்கிய ரூ.5 லட்சம் கடனுக்கு, வட்டியாக ரூ.1.80 செலுத்துவிட்டாராம். ஆனால் இவர் கொடுத்த காலி வங்கி காசோலையை பயன்படுத்தி அவருக்கு கடன் கொடுத்தவர்கள் வீட்டை எழுதி கேட்டு மிரட்டுகிறார்களாம்.
இந்த பிரச்சினையில் தனது சகோதரரையும் கொலை செய்துவிட்டு, விபத்து என நாடகமாடி வருகின்றனர், என்று தெரிவித்துள்ளவர், தனது சகோதரரின் மரணத்தில் சந்தேகம் உள்ளது, என புகார் அளித்தும் போலீஸ் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை, என்று தெரிவித்துள்ளார்.
மேலும், ஆனந்தியை கொலை செய்துவிடுவதாக மிரட்டுபவர்கள், அவர் மீது ஆசிட் வீசுவோம், என்றும் தொடர்ந்து மிரட்டி வருகிறார்களாம்.
இது பற்றி சென்னை போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ள நடிகை ஆனந்தி, முதல்வர் தனிப்பிரிவிற்கும் புகார் மனு கொடுத்துள்ளாராம்.
கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான KVN Productions வெங்கட் கே...
ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில், சாய் காவியா சாய் கைலாஷ் வழங்க, பத்மராஜு ஜெய்சங்கர் தயாரிப்பில், பாஸ்கர் சதாசிவம் இயக்கத்தில், சமூக அக்கறை மிக்க களத்தில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’உருட்டு உருட்டு’...
இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...