தீபாவளியன்று வெளியான விஜயின் ‘மெர்சல்’ ரூ.200 கோடி வசூலை நெருங்கி வருவதாக கூறப்படுகிறது. தமிழகம் முழுவதும் தற்போதும் ஹவுஸ் புல் காட்சிகளோடு ஓடிக்கொண்டிருக்கும் மெர்சல் படத்திற்காக வைக்கப்பட்ட கட்-அவுட் ஒன்றால் ஒருவர் பலத்த காயம் அடைந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்போரூரில் உள்ள ராஜீவ் காந்தி சாலையில் விஜயின் ‘மெர்சல்’ படத்திற்கு 40 அடிக்கு மேல் ஒரு கட்-அவுட் வைத்துள்ளனர்.
தற்போது பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால், அந்த கட்-அவுட் கீழே விழ, அந்த வழியாக சென்ற ஒருவருக்கு தலையில் அடிப்பட்டுள்ளது.
இது குறித்து போலீசாரிடம் புகார் தெரிவிக்கப்பட, போலீஸ் தரப்பிலோ, கட்-அவுட் வைக்க எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை, என்று கூறியதோடு, இந்த விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும், என்றும் தெரிவித்துள்ளனர்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...