தீபாவளியன்று வெளியான விஜயின் ‘மெர்சல்’ ரூ.200 கோடி வசூலை நெருங்கி வருவதாக கூறப்படுகிறது. தமிழகம் முழுவதும் தற்போதும் ஹவுஸ் புல் காட்சிகளோடு ஓடிக்கொண்டிருக்கும் மெர்சல் படத்திற்காக வைக்கப்பட்ட கட்-அவுட் ஒன்றால் ஒருவர் பலத்த காயம் அடைந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்போரூரில் உள்ள ராஜீவ் காந்தி சாலையில் விஜயின் ‘மெர்சல்’ படத்திற்கு 40 அடிக்கு மேல் ஒரு கட்-அவுட் வைத்துள்ளனர்.
தற்போது பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால், அந்த கட்-அவுட் கீழே விழ, அந்த வழியாக சென்ற ஒருவருக்கு தலையில் அடிப்பட்டுள்ளது.
இது குறித்து போலீசாரிடம் புகார் தெரிவிக்கப்பட, போலீஸ் தரப்பிலோ, கட்-அவுட் வைக்க எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை, என்று கூறியதோடு, இந்த விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும், என்றும் தெரிவித்துள்ளனர்.
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...