‘மெர்சல்’ படத்தின் மாபெரும் வெற்றியால் சந்தோஷத்தில் மிதந்துக் கொண்டிருக்கும் விஜய் ரசிகர்களை தனது பேட்டியால் பெரும் கோபம் கொள்ளச் செய்திருக்கிறார் முன்னணி இயக்குநர் ஒருவர்.
அவர் வேறு யாருமல்ல, ‘ரட்சகன்’ என்ற படத்தை இயக்கிவிட்டு, அதன் பிறகு படு மொக்கையான படங்களை இயக்கிய ப்ரவீன் காந்தி தான் அந்த இயக்குநர். இவர் இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் விஜயை படு கேவலமாக திட்டியுள்ளார்.
“விஜய் கோலா கம்பெனி விளம்பரத்திலும் நடிக்கின்றார். அதே சமயம் கத்தி படத்தின் வசனமும் பேசுகின்றார், இது மிகப்பெரிய கேவலமாக இல்லையா, அவரை பார்க்கும் போது எனக்கு கோபம் தான் வருகின்றது” என மோசமாக திட்டியுள்ளார்.
பிரவின் காந்தியின் இந்த பேட்டி விஜய் ரசிகர்களை கடும்கோபமடைய செய்துள்ளது. தற்போது சமூக வலைதளங்களில் பிரவின் காந்தியை வறுத்தெடுக்கும் ரசிகர்கள், “விஜய் எப்போதோ நடித்த கோலோ விளம்பரம் குறித்து தற்போது பேசுவது எந்தவிதத்தில் நியாயம்?” என்று கேள்வியும் எழுப்பியுள்ளார்கள்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...